நடிகர்
@actorvijay அவர்களின்
ஊழல் பட்டியல் 3
…..,……………………………………
யோக்கியன் வரான் சொம்ப எடுத்து உள்ள வை என்னும் கதையாக
#தவெக தலைவரும் நடிகருமான விஜய் ஊழலற்ற ஆட்சி குறித்து பிதற்றுகிறார்.
ஆனால்,அரசுக்கு கட்ட வேண்டிய வரியை கட்டாமல் ஏமாற்றுவதும்
ஒரு வகையில் ஊழல் தான்.
ஏற்கனவே நடிகர் விஜய் செய்த இரு மோசடித்தனத்தை அம்பலப்படுத்தினோம்.
இதோ மூன்றாவது மோசடி.
கோடிகளை விட்டுவிட்டு வந்ததாக சொல்லும் அந்த விஜய், அந்த கோடிகளுக்கு உரிய வரியை நேர்மையோடு கட்டினாரா என்பதை பார்ப்போம்..
ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் வழக்கு:
இங்கிலாந்து நாட்டிலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls Royce Ghost) சொகுசு காரை இறக்குமதி செய்கிறார் நடிகர் விஜய். அந்த வாகனத்துக்கு இறக்குமதி வரியை செலுத்துவிட்டு பதிவு செய்ய கோருகிறார். ஆனால் நுழைவு வரியும் விதிக்கப்படுகிறது. இதனை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் 16.7.2012 அன்று வழக்கு (WP-18385/2012) தொடர்ந்தார்.
சுமார் 9 ஆண்டுகள் நிலுவையில் இருந்த இந்த வழக்கில், 8.7.2021ல் தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அளித்த தீர்ப்பில், 2012ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட நுழைவு வரி சரி தான் என்றும், அதனை உடனே கட்டும்படியும் உத்தரவிட்டார். 11 பக்கங்கள் கொண்ட அந்த தீர்ப்பில் நீதிபதி சுப்ரமணியம் பதிவு செய்துள்ள கருத்துகளை பத்திவாரியாக..
3 - மனுதாரர் விஜய் தனது மனுவில் அவரது தொழிலைப் பற்றி எங்குமே குறிப்பிடாதது ஆச்சர்யமளிக்கிறது. மனுவில் இந்த தரவு எதுவும் இல்லை.
4 - புகழ் பெற்ற திரைப்பட நடிகரான மனுதாரர், அவருக்கான வரியை உரிய நேரத்தில் சரியாக செலுத்த வேண்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறார்
7 - மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகரை அவர்கள் ‘ரியல் ஹீரோ’ என கருதுகின்றனர். அதனால் ‘ரீல் ஹீரோ’ போல செயல்பட கூடாது. வரி ஏய்ப்பு என்பது தேசவிரோத, சட்டவிரோத செயல்பாடாக கருதப்பட வேண்டும்
8 - சமூக நீதியையும், ஊழல் எதிர்ப்பையும் தங்கள் படங்களில் காட்டுபவர்கள், சட்டத்துக்கு புறம்பாக வரி ஏய்ப்பில் ஈடுபடுகின்றனர்
9 - இத்தகைய உயர்நிலையில் உள்ளவர்கள் நிஜ ஹீரோக்களாக வரியை செலுத்தினால் தான் அரசியலமைப்பு சொல்லும் சமூக நீதியை வென்றெடுக்க முடியும். நுழைவு வரியை செலுத்த மறுத்து, 9 ஆண்டுகள் வழக்கை நடத்துவதை பாராட்ட முடியாது
10 - சட்டப்பூர்வமாக சாமானிய மக்கள் செயல்பட வேண்டும் எதிர்பார்க்கப்படும் சமூகத்தில், பணக்காரர்கள் வரி செலுத்த மறுத்தால் அரசியலமைப்பின் நோக்கத்தை அடைய முடியாது
11 - தனது லட்சக்கணக்கான ரசிகர்கள் காசு கொடுத்து பார்த்த பணத்திலிருந்து சொகுசு காரை வாங்கி, அதற்கு நுழைவு வரி கட்ட மறுப்பதை ஏற்க முடியாது. இந்த நாட்டின் உயர்ந்த மனிதர்கள் தங்களிடமுள்ள பணம், ஏழைகளின் ரத்தத்தினால் தான் சேருகிறதேயொழிய வானத்திலிருந்து பொழிவதில்லை என்பதை உணர வேண்டும்
14 - 2012ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட நுழைவு வரியை மனுதாரர் 2 வார காலத்திற்குள் செலுத்த வேண்டும்
15 - முதலைமைச்சரின் கோவிட் நிவாரண நிதிக்கு மனுதாரர் விஜய் ரூ.1 லட்சத்தை அபராதமாக செலுத்த உத்தரவிடுகிறேன்
தீர்ப்பில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகளை நீக்கும்படி, விஜய் தரப்பு மேல்முறையீடு (WA-1810/2021) சென்றது. விஜய் குறித்து சொல்லப்பட்ட கருத்துகளை நீக்கி
இரு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா & முகமது ஷஃபிக் அமர்வு25.1.22ல் உத்தரவிட்டது. மாநிலங்கள் நுழைவு வரி விதிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுவான வழக்கு நிலுவையில் இருந்ததாலேயே வரி செலுத்துவதை தவிர்த்தார் எனும் வாதத்தை நீதிமன்றம் ஏற்றது.ஆனாலும்,
வரி கட்டுவதற்கு உத்தரவிட்டதால்
வேறு வழியே இல்லாமல் கட்டி தொலைத்துள்ளார் நடிகர் விஜய்.
அதாவது, இறக்கப்பட்டுள்ள காருக்கு வரி கட்டாமலே அரசாங்கத்தை ஏமாற்றலாம் என்பது தான் விஜய்யின் நோக்கம்.
திருட்டு அம்பலமாகி மாட்டிக்கொண்டதால் வரி கட்டியுள்ளார்.
ஒரு நடிகர் என்பதை பயன்படுத்தி இத்தனை முறைகேடுகளை செய்த
இந்த நபர் அதிகாரத்துக்கு வந்தால் எத்தனை ஊழல்கள்,முறைகேடுகள் செய்வார்?
இந்த லட்சணத்தில் யோக்கியன் வேடம் வேறு.
உண்மையான தீய சக்தி விஜய் தான்.
அவரை நம்பி போகிறவர்கள்
நிலைமை தான் பாவம்.
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
6.3.2026