'குமரி மாவட்ட மலைவாழ் மக்கள் வனவிலங்குகள் பயம் மற்றும் அடிப்படை வசதி இன்றி தவிப்பு`
வனவிலங்கு தாக்குதல் பயத்தால் குமரி மாவட்ட மலை கிராம பழங்குடியின மக்கள் இரவில் மரங்களில் 'பரண்' அமைத்து வசிக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக யானை, சிறுத்தை ஊடுருவல் அதிகரித்துள்ளது.
இத்துடன் சாலை, குடிநீர், போக்குவரத்து, மருத்துவ வசதி இல்லாமையும் அவர்களின் அன்றாட வாழ்வை பாதிக்கிறது.
நிரந்தர தீர்வு கோரி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.