நேற்று (14.06.2026) திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, பேரூர், நகர, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் ஊழியர் கூட்டம் மணப்பாறை அகிலாண்டேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சோதனையான காலகட்டத்தில் தொண்டர்களின் பங்களிப்புகள் குறித்தும், அதன் பிறகு கழகம் மீண்டெழுந்தது குறித்தும் எடுத்துக் கூறி,
தற்போதுள்ள அரசியலில் நமது கழக சூழ்நிலையை, தொண்டர்களின் இடத்தில் இருந்து பொதுச் செயலாளராக உயர்ந்துள்ள மாண்புமிகு அண்ணன்
@EPSTamilNadu அவர்கள் உறுதியாக நிவர்த்தி செய்து, கழகத்தை வெற்றி பாதையில் அழைத்து செல்வார், அதற்கு நாம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், சமூக வலைதளங்களில் நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைத்தேன்.
மேலும், குறிப்பிட்ட ஒரு கட்சி எவ்வாறு தமிழ்நாடு மக்களையும், இளைஞர்களையும் Manipulate செய்தது, செய்கிறது, அதனால் எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படுகிறது என்பதையும் விரிவாக எடுத்துரைத்து, அதற்கு ஏற்றார் போல நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் உரையாற்றினேன்.
#AIADMK