#29 - 4.5/5😍🔥😊
திருவள்ளுவர் எழுதாத உதட்டு குறளுக்காகவும்,கட்டிட்டு தொட்டா என்ன தொட்டுட்டு கட்டினா என்ன என்ற கட்டில் சன்டைகளை எதிர்பார்த்தும், இது கன்டிப்பா இளசுகளை குஜால்படுத்தும் மஜா படம்தான் எனும் மனநிலையிலே படத்தின் கதைக்குள் நுழைந்தேன்.ஆரம்பத்தில் ஒரு சாதாரன "ஏழை" நடுத்தர குடும்பத்தில் எவ்வித பின்புல ஆதரவும் இல்லாமல்,இது சரி இது தப்பு என்று எடுத்துக்கூற கூட ஆளில்லாமல் வீட்டின் முதல் தலைமுறை பட்டதாரியாக தன் யார்?தான் அடையாளம்தான் என்ன?இந்த சமூகத்தில் எனக்கான அங்கிகாரம்தான் என்ன?என அறிமுகம் ஆகும் சத்யாவை பார்க்கும்போது அப்படியே என்னை பார்ப்பது போலவே தொடங்குகிறது கதை.2000ம் காலக்கட்டங்களில் கிராமத்திலிருந்து சென்னை மாதிரியான பெருநகரத்துக்கு முதல் முறை வேலைத்தேடி போகும் ஓர் இளைஞன் கிடைக்கும் நிறுவனத்தில் சொற்ப வருமானத்திற்கு வேலைக்கு சேர்ந்து அது போதாமல் பார்ட் டைம் வேலையாக கேட்டரிங் வேலைகளை செய்துக்கொண்டு வாழ்க்கையில் இலக்கு என்ற ஒன்றே இல்லாமல் காலத்தை ஓட்டும் அந்த சராசரி இளைஞனை மீண்டும் டிவியின் ஊடாக என்னையே கான்கிறேன் சத்யா முகத்தில்.பின் விஜியின் வருகை,சத்யாவிடம் அவளின் சலனமற்ற தொடுதல்,அதில் சஞ்சலமடைந்த சத்யாவின் மனம் என கதை காதலை நோக்கி நகர்கிறது.இருவருக்குள்ளும் வரும் உரையாடல்,சமிக்ஞைகள்,கடற்கரையோரத்தில் காதலர்களின் Comboவான கடலைக்கு பதில் மல்லிகை பூவை வைத்து காதலை தெரிவித்த விதம், பேருந்து பயணத்தில் காதலுக்கு கொடுத்த விளக்கம் என அத்தனை காட்சிகளும் எதார்த்தமாக ரசிக்கும்படியாக இருந்தது.இவ்வளவு அழகாக காதல் காட்சிகளை வைத்த ரத்னா அவர்கள் காதலில் கைதேர்ந்தவர் போல என நினைத்தேன்.ஆனால் வருத்தம் என்னவோ அவரின் கடந்தகால காதல் நினைவுகள், அனுபவங்கள் இன்னும் எத்தனை சீன்(காட்சிகளாக) எடுக்கப்பட்டு வெட்டப்பட்டதோ அல்லது நேரம் போதாமையால் நிராகரிக்கப்பட்டதோ என்பததுதான்😉!காதலில் கரைந்த இரு காதலர்கள் சத்யாவின் நண்பன் வருங்கால இயக்குநரின் காதல் கதைகளை கேட்டபின் நிதானத்திற்கு வருகிறார்கள்.படம் பார்க்கும்போது அதுவரை கலங்காத கண் முதல் முறை கலங்கத்தொடங்கிறது நண்பனின் காதல் கதைகளை கேட்டு.அதுதான் கதையின் அடுத்தக்கட்ட நகர்வு எனவும் நினைக்கிறேன்.
அதன்பின் தன் இலக்கை நோக்கி,தன் இலட்சிய கனவை தொரத்த ஆரம்பிக்கிறாள் விஜி..ஆனால் சத்யாவோ விஜி தான் தனக்கு ஒரே கனவு என விஜியை துரத்த ஆரம்பிக்கிறான்.இதற்கிடையில் இவர்களுக்குள் வரும் மோதல்,முரண்,புரிதலின்மை என காதலுக்கே உரித்தான சில குணாதிசயங்களும்,அச்சயமத்தில் சத்யாவுக்குள் எட்டிப்பார்க்கும் ஆணாதிக்க மனோபாவமும் அதனால் ஏற்படும் காதல் பிளவு என சில நிகழ்வுகள் அருமையாக காட்சியாக்கப்பட்டுள்ளது.இறுதியில் விஜி தன் கனவை துரத்திப்பிடித்தாளா?சத்யா தான் யார் என்பதை கண்டு பிடித்தானா?என்பதுதான் கதை..!!
நிறைய எழுதனும் போல தோன்றுகிறது ஆனால் வாசகர்களின் நலன் கருதி படத்தில் ரத்னாவின் கிளாப்ஸ் வாங்க வைக்கும் இரத்தின காட்சிகளை மட்டும் வரிசைப்படுத்தி ஓர் வரிகளில் கூறுவிடுகின்றேன்.
1)படம் முழுவதும் தான் யார்?என் அடையாளம் என்ன?என அடையாளத்தை தேடி ஓடும் சத்யா-விஜி-வருங்கால இயக்குநர்-விஜி/சத்யாவின் தாய்-சத்யாவின் பள்ளிகால நண்பன்-கலெக்டராக வரும் திருநங்கை என படத்தில் வரும் அத்தனை கேரக்டரும் படத்தின் ஆரம்பத்தில் கூறியது போல் தன் அடையாளத்தை தேடியும்,அதனை அங்கீகார படுத்த முயற்ச்சிக்கவுமே ஓடுகிறது.😍
2)School Books hearts vs காதலர்களின் Fantasy heart வைத்து சொல்லப்பட்ட dialogues👏👏
3)சத்யாவின் நண்பன் வருங்கால இயக்குநரின் காதல் கதை😭
4)மருத்துவயனையில் விஜியின் அம்மா சத்யாவை தொடுதல்.
5)படத்தின் இறுதி கவிதை😍
6)இடையில் ஜோசிய காரியின் எலிவேஷனில் வரும் விஜியின் ஆடல்🔥
எது எப்படியோ சத்யாவும் விஜியும் தொலைத்த என் கனவுகளையும்,29வயது ஆகிவிட்டதே இதுவரை எதுவும் செய்யவில்லையே என்ற குற்றவுணர்ச்சியையும்,இன்னும் ஏதும் கெட்டுப்போகவில்லை இப்போது தொடங்கினாலும் நினைத்தது சாத்தியமாகும் என்று இலக்கை நோக்கி ஜாலியாக ஓடு என்று உற்சாகமூட்டி கண்களை குளமாக்கி சிறிது கனத்த மௌனத்தை கொடுத்து என்னை புனிதாக உணரவைத்து இரட்சித்தார்கள்.
(பி.கு:-7G ரெயின்போ காலணியில் ஒருவேளை கதிர் தான் யார் என தன் அடையாளத்தை கண்டுபிடித்தும்,அனிதாவுக்கு சில கனவுகள் இருந்து அதனை துரத்தி பிடிப்பதுபோலவும் ஒரு பாஸிட்டிவாக கதை அமைத்திருந்தால் ஒருவேளை அவர்கள்தான் சத்யாகவும்-விஜியாகவும் இருந்திருப்பார்களோ என்னவோ?And காதலனை காதலியின் தாயார் தொட்டு உணர்வுபூர்வமாக ஆசிர்வதிக்கும் ஒரு காட்சியை 7Gக்கு பிறகு 29 படத்திலே காண்கிறேன்.)
Thanks
@MrRathna அண்ணா😍😊🔥 And Sorry for missing out on watching theatre🙏🙏
இன்னும் கொஞ்சம் புரமோஷன்ல கவனம் செலுத்தியிருக்கலாம்'ண்ணா 😒
நல்ல படம்..😍 4.5/5