Byte of useful information

Joined November 2016
5,967 Photos and videos
Pinned Tweet
FMB & Land Survey விவரங்கள் மற்றும் அதேபோல Map View-ல் பார்க்க இணையதளம் மற்றும் செயலி. Website 👉 tngis.tn.gov.in/apps/gi_view… Website 👉 eservices.tn.gov.in/eservice… App 👉 play.google.com/store/apps/d… #TamilNadu #Land

62
144
10,462
இந்த மாதம் நீங்கள் கட்டிய மின் கட்டணம் கடந்த மாதம் மின் கட்டணத்தை விட குறைவா? அதிகமா? #Justasking
15
2
13
5,785
GMT - Greenwich Mean Time
1
547
Technical Position 👇🏻
மத்திய அரசின் C-DAC @cdacindia நிறுவனத்தில் பலவேறு தொழில்நுட்ப பிரிவுகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு. இந்தியா முழுவதும் சென்னை/பெங்களூரு போன்ற நகரங்களில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு. கடைசி தேதி: 20.06.2026 விண்ணப்பிக்க 👉careers.cdac.in #JobAlert
2
576
Knowledge Hub retweeted
மத்திய அரசின் C-DAC @cdacindia நிறுவனத்தில் பலவேறு தொழில்நுட்ப பிரிவுகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு. இந்தியா முழுவதும் சென்னை/பெங்களூரு போன்ற நகரங்களில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு. கடைசி தேதி: 20.06.2026 விண்ணப்பிக்க 👉careers.cdac.in #JobAlert
4
11
1,668
Knowledge Hub retweeted
சென்னையில் உள்ள Golden Palm Canteen (GPC) மற்றும் அதன் நீட்டிப்பு மையங்களில் (விழுப்புரம், திருவண்ணாமலை) ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு. 📅 கடைசித் தேதி: 30 ஜூன் 2026 📧 மின்னஞ்சல்: stnhqurcchennai@gmail.com மேலும் விவரங்கள் 👇🏻 #JobAlert
2
5
860
Knowledge Hub retweeted
நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று தான் என்னுடைய திருமணத்தை பதிவு செய்தேன். இடைத்தரகர்கள் இல்லாமல் திருச்சி தில்லை நகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வதில்லை. அதுவும் இளநிலை உதவியாளர் டேவிட் என்பவர் உச்சகட்ட ரௌடியிசத்தில் ஈடுபட்டதை என் கண் முன்னரே பார்த்தேன். ஒன்பது மாத கர்ப்பிணியான என் மனைவியை 4.1/2 மணி நேரம் காக்க வைத்து தான் புகைப்படம் எடுக்கப்பட்டது. வேதனையின் விழும்பில் சாபமிட்டுவிட்டி வந்தேன். அரசு அலுவலகங்களில் எதுவும் மாறவில்லை. திருச்சியில் தாமதமான திருமண பதிவிற்கு 7000 வரை இடைத்தரகர்கள் மூலம் வசூலிக்கிறார்கள். @CMOTamilnadu @logintvk @annamalai_k @TrichyCorp
திருமண பதிவு செய்ய அரசின் ரூ.500 கட்டணத்திற்கு ரூ.3000 வசூலா? நெல்லையில் அதிர்ச்சி தகவல்! #Nellai #Registeroffice #Marriage #Bribe #Newstamil24x7
17
173
355
42,441
Knowledge Hub retweeted
கிரைய ரத்து ஆவணம் என்றால் என்ன ? கிரைய ரத்து ஆவணம் (Cancellation Deed of Sale) என்பது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒரு சொத்து விற்பனைப் பத்திரத்தை (Sale Deed) சட்டப்பூர்வமாக ரத்து செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு ஆவணம் ஆகும். ஒரு சொத்தை விற்றவர் மற்றும் வாங்கியவர் ஆகிய இருவருக்குள்ளும் ஏற்படும் சில உடன்பாடுகள் அல்லது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த ஆவணம் பதிவு செய்யப்படுகிறது. இது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள்: 1. இது எப்போது பயன்படுத்தப்படும்? பணம் தராமல் ஏமாற்றுதல்: சொத்தை வாங்குபவர், விற்க ஒப்புக்கொண்ட முழுத் தொகையையும் (Sale Consideration) தராமல் இழுத்தடிக்கும் போது. ஏமாற்று வேலை (Fraud): தவறான ஆவணங்களைக் காட்டி அல்லது போலி நபர்களை வைத்து சொத்து கிரையம் செய்யப்பட்டிருப்பது தெரியவரும் போது. பரஸ்பர சம்மதம்: வாங்குபவருக்கும், விற்பவருக்கும் இடையே ஏதேனும் மனஸ்தாபம் ஏற்பட்டு, இருவருமே "இந்த வியாபாரம் வேண்டாம்" என்று பரஸ்பரமாக முடிவெடுக்கும் போது. 2. மிக முக்கியமான சட்ட விதிமுறை (Supreme Court Rule)இருதரப்பு சம்மதம் கட்டாயம்: கிரையப் பத்திரத்தைப் பதிவு செய்த பிறகு, அதை ரத்து செய்ய வேண்டும் என்றால் விற்பவர் மற்றும் வாங்கியவர் ஆகிய இருவருமே சார்பதிவாளர் (Sub-Registrar) அலுவலகத்திற்கு நேரில் வந்து கையெழுத்திட வேண்டும். தன்னிச்சையாக ரத்து செய்ய முடியாது: நிலத்தை விற்றவர் மட்டுமே தனியாகச் சென்று, வாங்கியவரின் சம்மதம் இல்லாமல் கிரையப் பத்திரத்தை ஒருதலைப்பட்சமாக (Unilateral Cancellation) ரத்து செய்ய சட்டப்படி முடியாது. 3. வாங்குபவர் வரமறுத்தால் என்ன செய்ய வேண்டும்? சொத்தை வாங்கியவர் ஏமாற்றிவிட்டார், ஆனால் அவர் கிரைய ரத்து ஆவணத்தில் கையெழுத்திட வர மறுக்கிறார் என்றால், சார்பதிவாளர் அதை ரத்து செய்ய மாட்டார். அந்தச் சூழ்நிலையில், பாதிக்கப்பட்டவர் சிவில் நீதிமன்றத்தை (Civil Court) நாடி, "இந்தக் கிரையப் பத்திரம் செல்லாது" என அறிவிக்கக் கோரி (Declaration and Cancellation Suit) வழக்கு தொடர வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலேயே அதை ரத்து செய்ய முடியும். #இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #அறிவோம்சட்டம்
14
38
4,577
ஆமா அந்த கார் எப்படி அங்க வந்தது🫢
18
23
308
151,016
பலரின் அதிகபட்ச எதிர்பார்ப்பே அன்றைய நாள் நல்லதாக அமைய வேண்டும் என்பதே!
1
5
929
நன்றி 🙏 வாழ்க்கையில் வெற்றி பெற, நமது ஆற்றல் நிலை, அதிர்வு அல்லது அலைவரிசையை உயர்த்த வேண்டும். நமது நாளின் தொடக்கத்திலும் முடிவிலும் நன்றி சொல்லப் பழகுங்கள். பிறகு, கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். நாம் பெற்ற பொருட்களுக்கும், தற்போது நாம் அனுபவிக்கும் வசதிகளுக்கும் நன்றி சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்வது நமது அதிர்வை உயர்த்துவதோடு, அக முரண்பாடுகளை நீக்குவதற்கும், கர்வம் போன்ற தீய உணர்ச்சிகளை மாற்றுவதற்கும் மிகவும் உதவியாக இருக்கும். நன்றி சொல்வதன் மூலம், மனதின் தூய்மையான பகுதிகளில் மறைந்திருக்கும் வெறுப்பு, பகைமை மற்றும் அடக்கப்பட்ட உணர்ச்சிகளை முற்றிலுமாக நீக்குவதும் சாத்தியமாகும். இவை அனைத்தும் நமது வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன. இவ்வாறு, தூய சுய சக்தியால் பல அற்புதங்களை உருவாக்க முடியும். நீங்கள் இதை படித்ததற்கு நன்றி. #Thanks

ALT Happy Thank You So Much GIF by sendwishonline.com

1
9
628
தமிழ்நாட்டில் இருக்கும் SC/ST (வன்கொடுமை தடுப்பு - PCR) சட்டம் என்றால் என்ன? PCR சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன..! வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கும் சட்ட நடவடிக்கைகள் மற்றும் குற்றத்தினை பொறுத்து அளிக்கப்படும் நிவாரணம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கும் சட்ட உதவிகள், நிவாரணத் தொகையை பெற எப்படி விண்ணப்பிக்க வேண்டும் பற்றிய தகவல்கள். பட உதவி: 🤖 #PCR #Act #SC_ST_Act #TamilNadu
35
105
5,639
Knowledge Hub retweeted
பட்டா ஒரு ஊரு, பத்திரம் இன்னொரு ஊரு - குழப்பமா? கவலை வேண்டாம்! நிலம் வாங்க போறோம். கனவு வீடு கட்ட போறோம். அந்த சந்தோஷத்துல Document-ல இருக்குற சின்ன சின்ன வார்தை கூட பெரிய குழப்பத்த கொடுத்துடும். அப்படி ஒரு குழப்பம் தான் "பட்டாவுல ஒரு ஊரு பேரு, பத்திரத்துல இன்னொரு ஊரு பேரு" வர்றது. இது தப்பா? மோசடியா? இல்ல சாதாரணமான விஷயமா? வாங்க, தெளிவா பாப்போம். 1. ஏன் ஊரு பேரு மாறுது? Revenue vs Registration நம்ம நாட்டுல நில நிர்வாகம் 2 விதமா நடக்குது. ஒன்னு வரி வசூலிக்கிறது. இன்னொன்னு பத்திரம் பதிவு பண்றது. வரி வசூலிக்கிறது கிராம நிர்வாக அலுவலர் VAO. அவர் பாக்குற பகுதிக்கு பேரு "Revenue Village". நம்ம Patta, Chitta, Adangal எல்லாம் இந்த Revenue Village பேருல தான் இருக்கும். பத்திரம் பதிவு பண்றது சார்பதிவாளர் அலுவலகம் SRO. ஒரு SRO பக்கத்துல இருக்குற பல கிராமத்துக்கு சேர்து பதிவு பண்ணும். அந்த SRO இருக்குற ஊரு பேரு "Registration Village". அதனால தான் உங்க நிலம் ஒரு Revenue Village-க்கு உட்பட்டு இருந்தாலும், பத்திரம் பதியுறது வேற ஒரு Registration Village SRO-ல நடக்கலாம். இது சட்டப்படி சரி. தப்பே இல்லை. பயப்பட வேண்டாம். 2. ஊரு பேர விட 100 மடங்கு முக்கியம் - Survey Number தான்! ஊரு பேரு மாறலாம். Owner பேரு மாறலாம். ஆனா ஒரு நிலத்துக்கு அரசாங்கம் கொடுக்குற Survey Number மட்டும் எப்பவும் மாறாது. அது அந்த நிலத்தோட நிரந்தர அடையாள எண். Aadhaar Card மாதிரி. ஒரு பெரிய நிலத்த Survery No இருக்கு. அத பின்னாடி துணைப் பிரிவு பண்ணி 2A, 2B, 2C-னு பிரிக்கலாம். மறுபடி 2D, 2E-னு துண்டு போடலாம். ஆனா ஒரு தடவை Number விழுந்துட்டா, அது வாழ்நாள் முழுக்க அந்த குறிப்பிட்ட நிலத்துக்கு மட்டும் தான். அதனால நிலம் வாங்க போறப்போ முதல் வேலை என்ன தெரியுமா? Patta எடுத்து Survey No துணைப் பிரிவு பரப்பளவு-ஐ Note பண்ணுங்க. அப்புறம் பத்திரம் / EC எடுத்து அதே Survey No துணைப் பிரிவு பரப்பளவு இருக்கானு பாருங்க. ஊரு பேரு ஒரு ஊருனு Patta-லயும், இன்னொரு ஊருனு EC-லயும் வந்தாலும் பரவால்ல. ஆனா Survey No துணைப் பிரிவு பரப்பளவு ரெண்டுலயும் அப்படியே Match ஆனா... அது ஒரே நிலம் தான். 100% சரி. Survey Number மட்டும் தப்பா இருந்தா, இல்ல பரப்பளவு குறைஞ்சு இருந்தா தான் உஷாராகனும். அப்போ தான் "இது வேற நிலம்"னு அர்த்தம். 3. Owner பேரு மாறி இருந்தா என்ன அர்த்தம்? Patta-ல இன்னொருத்தர் பேரு இருக்குனு பாத்து பயப்படாதீங்க. நிலம் கை மாறும் போது Owner பேரு மாறுறது சகஜம். விற்பனை, தானம், வாரிசு பாகப்பிரிவினைனு பல காரணம் இருக்கு. அதனால Patta-ல இருக்குற பேரும், பத்திரம் கொடுக்குறவர் பேரும் ஒரே ஆளா இருக்கானு மட்டும் பாருங்க. இல்லைனா, அவருக்கு அந்த நிலம் எப்படி வந்ததுனு கேளுங்க. பாகப்பிரிவினை பத்திரம், விற்பனை பத்திரம், வாரிசு சான்றுனு தொடர்சியா Document இருக்கானு பாருங்க. 4. குழப்பம் வந்தா என்ன பண்ணனும்? 3 எளிய வழி பட்டாவும் EC-யும் வேற வேற ஊரா இருந்தா உடனே பயந்துடாதீங்க. இந்த 3 வழில தெளிவு படுத்திக்கோங்க. வழி 1: அரசு இணையதளம் TamilNilam.in தளத்துல போய் உங்க Patta Number போட்டு பாருங்க. அதுல Survey No, பரப்பளவு, Owner பேரு எல்லாம் வரும். Document-ஓட Compare பண்ணுங்க. வழி 2: VAO-வ கேளுங்க உங்க பகுதி VAO கிட்ட போய் "எங்க நிலம் Patta-ல ஒரு ஊரு, ஆனா EC-ல வேற ஊரு வருது. இது சரியா?"னு கேளுங்க. அவர் 2 நிமிஷத்துல தெளிவா சொல்லிடுவாரு. வழி 3: SRO-ல விசாரிங்க சந்தேகம் இருந்தா பத்திரம் பதியுற SRO-க்கு போய் "இந்த Survey No உங்க பரிவுக்கு உட்பட்டதா?"னு கேளுங்க. அவங்க Register-ல பார்த்து Confirm பண்ணி சொல்லுவாங்க. முடிவுரை: விழிப்புணர்வே பாதுகாப்பு நிலம் வாங்குறது ஒரு பெரிய முதலீடு. அதுல சின்ன சந்தேகம் வந்தாலும் தெளிவு படுத்திக்கிறது நம்ம பொறுப்பு. பட்டாவுல ஒரு ஊரு, பத்திரத்துல ஒரு ஊருனு வந்தா அது மோசடி இல்லை. Revenue Village-க்கும் Registration Village-க்கும் இருக்குற வித்தியாசம் அவ்வளவு தான். ஆனா Survey Number, துணைப் பிரிவு, பரப்பளவு, எல்லை இதுல மட்டும் எந்த மாற்றமும் இருக்க கூடாது. அத மட்டும் உறுதி பண்ணிக்கோங்க. Document-ல சந்தேகம் வந்தா தயங்காம அரசு அலுவலர்கிட்ட கேளுங்க. நிலம் வாங்குறதுக்கு முன்னாடி 10 தடவை கேள்வி கேக்குறது தப்பே இல்லை. விழிப்பா இருந்தா, ஏமாற்றம் வராது. நிம்மதியா வீடு கட்டலாம். நில ஆவணங்கள் தொடர்பான சட்டச் சிக்கல்களில் தெளிவு பெறவும், பட்டா மற்றும் பத்திரத்தில் உள்ள ஊர் பெயர் குழப்பத்தைத் தீர்க்கவும் வழக்கறிஞர் ஆலோசனைகள் உதவும். #இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #பயனுள்ளதகவல் #அறிவோம்சட்டம்

1
9
26
2,747
Cybersecurity Challenges 👏🏻👏🏻👏🏻 Great opportunity for Ethical hackers to challenge themselves
உங்கள் திறமையை வெளிப்படுத்த ஓர் வாய்ப்பு. PAN-INDIA 36-HOUR BUG BOUNTY (BOSS OS) CHALLENGE 2026 HUNT. HACK. SECURE THE BOSS OS Join #cybersecurity professionals, ethical hackers, students, and researchers across India Registration 🏁 10.06.26 👉 ssm.cdac.in
1
617
Knowledge Hub retweeted
இது நல்லா இருக்கே..

1
5
22
4,243
Knowledge Hub retweeted
மிகவும் சக்திவாய்ந்த மனிதராக மாறுவது எப்படி? 1. உங்கள் மனதை வெல்லுங்கள்! உங்கள் எண்ணங்களே உங்கள் வாழ்க்கையை (உண்மையை) வடிவமைக்கின்றன. தெளிவு, கட்டுப்பாடு மற்றும் குறிக்கோளுடன் சிந்திக்கும்படி உங்கள் மனதை பழக்குங்கள். 2. உங்கள் உணர்ச்சிகளை வெல்லுங்கள்! உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதே உண்மையான சக்தி. அமைதியாக இருங்கள், உறுதியாக இருங்கள், உங்கள் உணர்ச்சிகள் உங்களை ஆள அனுமதிக்காதீர்கள். 3. உங்கள் உடலை வெல்லுங்கள்! உங்கள் உடல் தான் உங்கள் ஆயுதம். அதைப் பாதுகாத்து, அதன் எல்லையை விரிவுபடுத்தி, அசைக்க முடியாத ஆற்றலை உருவாக்குங்கள். 4. உங்கள் நேரத்தை வெல்லுங்கள்! உங்கள் வாழ்க்கை உங்கள் நேரத்தைச் சார்ந்திருப்பது போலவே அதைப் பாதுகாக்கவும் — ஏனெனில் அது தான் உண்மை. 5. உங்கள் பழக்கங்களை வெல்லுங்கள்! சிறிய தினசரி பழக்கவழக்கங்கள் நீண்ட காலத்தில் மிகப்பெரிய ஆற்றலை உருவாக்குகின்றன. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் (தொடர்ச்சியைத் தவறவிடாதீர்கள்). 6. உங்கள் கவனத்தை வெல்லுங்கள்! உங்கள் கவனம் எங்கு செல்கிறதோ, அங்கே உங்கள் வாழ்க்கை பாய்கிறது. கவனச்சிதறல்களைத் தவிர்த்து, குறிக்கோளில் நிலைத்திருங்கள். 7. உங்கள் தரத்தை வெல்லுங்கள்! உங்களுக்கான தரத்தை உயர்த்திக் கொள்ளுங்கள், உங்களுக்குத் தகுதியானதை விடக் குறைவான எதற்கும் ஒருபோதும் உடன்படாதீர்கள். 8. உங்களைச் சுற்றியுள்ளவர்களை வெல்லுங்கள்! உங்களுக்கு ஊக்கமளிக்கும், உங்களுக்கு சவால் விடும் மற்றும் உங்களை அடுத்த நிலைக்கு உயர்த்தும் மனிதர்களுடன் உங்களைச் சூழ்ந்து கொள்ளுங்கள். 9. உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை வெல்லுங்கள்! உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தோடு இணைந்து நீங்கள் வாழும்போது, உங்களை யாராலும் தடுக்க முடியாது. 10. உங்களை நீங்களே வெல்லுங்கள்! உங்களை நீங்களே வெல்வதுதான் இறுதிப் பேராற்றல். உங்களைக் கட்டுப்படுத்துங்கள், உங்கள் வாழ்க்கையை வழிநடத்துங்கள். #இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #பயனுள்ளதகவல்
2
44
128
9,159
Knowledge Hub retweeted
CISF படை நிறுவனத்தில் பாரா மெடிக்கல் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு சம்பளம் - ₹ 92300 வரை விண்ணப்பிக்க 👉 cisfrectt.cisf.gov.in/ கடைசி தேதி: 07.07.2026 முழுவிவரம்: cisfrectt.cisf.gov.in/file_o… #Jobs #Paramedical #CISF
2
10
1,088
இந்தியாவின் பணத்தின் பரிணாமம்
2
170
879
21,767
இந்தியாவில் கல்வி செலவும், மருத்துவ செலவும் நாட்டில் மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்திருக்கிறது.
3
2
28
2,793
ஒரு முறை சொல்லிப்பாருங்கள் "என் வாழ்வில் எந்தச் சூழ்நிலையையும் கையாளும் வலிமை என்னிடம் உள்ளது." #Monday #GOODMORNİNG
3
21
1,395
சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு. - புதிய நடைமுறையை அறிவித்தது தமிழக பத்திரப்பதிவுத்துறை
11
41
2,563