தமிழ்நாட்டின் நிதி நிலையை சீராக்குகிறேன் என்று சவால் விட்டு பதவியில் அமர்ந்தவர் எனது நண்பர் பிடிஆர் தியாகராஜன். அதற்காக கடுமையாக முயற்சி செய்தார். ஓரளவு செய்திருப்பார் என்றே நம்புகிறேன்.
மகன் 30 ஆயிரம் கோடி, மருமகன் 30 ஆயிரம் கோடி சம்பாதித்து விட்டார்கள் என்ற உண்மையை சொன்னார் என்ற ஒரே காரணத்துக்காக, அவரை நிதித்துறையிலிருந்து மாற்றி, விருப்பமே இல்லாத தங்கம் தென்னரசுவை அத்துறையில் நியமித்து, தலைக்கனம் பிடித்த ஒரு அதிகாரியை நிதி துறை செயலராக போட்டு, தமிழகத்தை மீளமுடியாத கடன் சுமையில் தள்ளி 8 கோடி மக்களுக்கு பேரும் துரோகத்தில் இழைத்திருக்கிறது திமுக மற்றும் அதன் தலைவர் முக ஸ்டாலின்.
வாங்கிய கடன்கள் மக்கள் நலத் திட்டங்களுக்கு அல்ல. தேவையற்ற பாலங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளை செய்து அதில் 25 முதல் 35 சதவிகிதம் வரை லஞ்சம் வாங்குவதற்காகவே கடன் வாங்கப்பட்டது.
இப்படி கடன் வாங்கியதில் பெரும் பொறுப்பு, எ.வ.வேலு, கே.என்.நேரு, ஐ. பெரியசாமி, சேகர் பாபு, ஆகியோரை சேரும். இப்படி ஊழல் செய்த பணத்தில்தான் சபரீசன் 150 கோடிக்கு வாட்ச் வாங்க முடிந்தது. முக ஸ்டாலின் 3 கோடி காரில் பயணிக்க முடிந்தது. செந்தாமரை பள்ளிக்கூடங்களை வாங்கி குவிக்க முடிந்தது. உதயநிதி திரைப்படங்களில் பணத்தை கொட்ட முடிந்தது.
இவர்களில் ஒருவர் விடாமல் அத்தனை பேர் மீதும் தமிழக அரசு ஊழல் வழக்குகளை தொடர வேண்டும். திமுகவோடு கள்ளக்கூட்டணியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி இதை ஒருபோதும் செய்திருக்க மாட்டார். தவெக அரசு செய்யும் என்று நம்புகிறேன்.
தமிழகத்துக்கு திமுக மாபெரும் தீங்கு. கொடிய விஷக்கிருமி. தப்பித்தவறிக்கூட திமுக மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விடக் கூடாது.