1968 ஆம் ஆண்டு லக்னோவிற்கு பெரியார் பயணம் செய்து ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டார்
7.10.1968 வடநாட்டுப் பயணத்தை துவக்கினார். சென்னையை விட்டுப் புறப்பட்டு 9.10.1968 செகந்திராபாத்தில் தங்கி, அங்கு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.
12.10.1968, மற்றும் 13.10.1968 தேதிகளில் இலக்னோவில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாநாட்டில் உரையாற்றினார்.
அங்கு பேசும்போது, “சாதி ஒழிய வேண்டு மானால் டெல்லி ஆட்சியிலிருந்து நாட்டைப் பிரிக்க வேண்டும்” என முழக்கமிட்டார்.