பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள்
இன்று (13.06.2026) ரிப்பன் கட்டட அலுவலகத்தில், தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட கவிஞர் கண்ணதாசன் நகர், 6ஆவது பிளாக்கில் ஒரு வீட்டிலிருந்து குப்பை கொட்டும்போது அவர்கள் தவறவிட்ட 2 சவரன் தங்கநகையினை குப்பைத் தொட்டியில் தேடி கண்டுபிடித்து உரிய நபரிடம் வழங்கிய தூய்மைப் பணியாளர் திரு.சதீஷ் அவர்களின் நேர்மையினைப் பாராட்டி சால்வை அணிவித்து கேடயம் வழங்கி கௌரவித்தார். உடன் மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு.எச்.ஆர்.கெளஷிக், இ.ஆ.ப., மற்றும் மண்டல அலுவலர் திரு.எ.ராஜ்குமார் உடனிருந்தனர்.
#ChennaiCorporation |
#NammaChennai |
#HeretoServe
@CMOTamilnadu |
@TNDIPRNEWS |
@tnmaws