மோடி பிரஸ் மீட் கொடுக்காததையும், விஜய் பிரஸ் மீட்டைத் தவிர்ப்பதையும் ஒப்பிட முடியாது. மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாகப் பொறுப்பு முழுமையாக முதலமைச்சரின் கையில் இருப்பதால், ஊடகங்களைச் சந்தித்து கேள்விகளுக்கு பதிலளிப்பது அவரது ஜனநாயகப் பொறுப்பு.
ஊடகங்களின் கேள்விகளைத் தவிர்ப்பதில் ஆளுமை இல்லை.
கடினமான கேள்விகளையும் நேருக்கு நேர் எதிர்கொண்டு, மக்களுக்கு விளக்கம் அளிப்பதில்தான் ஒரு தலைவரின் ஆளுமை, தன்னம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மை வெளிப்படுகிறது.
"கைத்தட்டல்களை மட்டும் ஏற்றுக்கொள்வது தலைமை அல்ல;
கேள்விகளையும் விமர்சனங்களையும் எதிர்கொள்வதுதான் உண்மையான தலைமை."