கருணையில் பிற உயிர்களை பார்த்து அவர் நலம் விரும்பி ஆன்ம உருக்கம் அடைவது என்பது (சர்வ சித்திகளும் பிறவியில்லா பெருவாழ்வும்), பிற உயிர்களின் (1-6 அறிவு ஜீவ ராசிகள்) கஷ்டங்களை பற்றி சதா சர்வ காலமும் எண்ணிக்கொண்டே இருப்பது மட்டுமே ஆகும்.
இப்படி இருந்தால் நமக்கான வலியும் வேதனையும், பிற உயிர்கள் படும் இன்னல்களின் மீது நமக்கு அதிகமாகிக்கொண்டே போகும். காலப்போக்கில் ஆன்மீகத்தில் ஆனந்தமாய் கொண்டாடவோ அமைதியாய் இருப்பதற்கோ வழியே இல்லை என்பது மாபெரும் உண்மை. மாறாக மனிதனுக்கு மிஞ்சுவது “மனோ நாசம்” மட்டுமே! நிர்-மலம், நிர்-குணம்!
ஏனெனில் இப்பிறவியானது சக ஜீவராசிகளின் கஷ்டங்களை நீங்கள் உணர்ந்து கொண்டே இருந்து பாடங்களை கற்றுக்கொண்டு மறைந்து போவதற்கு மட்டுமே!
பூமி என்பது மாபெரும் சிறை! இங்கு பிறரை திருத்துவதென்பது முற்றிலும் முடியாத ஒன்று! “நான்” நிறைய திருந்த வேண்டும் என்பது சத்தியம்! அவன் அனுமதியின்றி இங்கு ஏதும் நடக்காது! அனைத்தையும் அவரே செய்கிறார், அவரே அனுபவிக்கிறார், அவரே “இறுதியில்” அமைதியை “கொல்கிறார்”, பின்பு அமைதியும் “கொள்கிறார்”! குருவே சரணம் ❤️🙏🏼
#ChangeYourselfFirst#InnerTransformation#BeTheChange#SelfMastery#WorkOnYourself#HealWithin#TransformYourMind#InnerPeaceFirst#SelfAwarenessJourney#ChangeStartsWithin#MasterYourself#LetThemBe#SelfGrowthMindset#EvolveDontControl#ShiftYourVibration