வன்கொடுமை தடுப்புச் சட்டம் (SC/ST Act) சில சமயங்களில் தனிநபர் விரோதம் காரணமாக தவறாகப் பயன்படுத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் நீதிமன்றங்களால் அவ்வப்போது சுட்டிக்காட்டப்படுகிறது.
வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 மத்திய அரசாங்கத்தால் இயற்றப்பட்ட சட்டமாகும்.
அந்தச் சட்டத்தில் ஏதேனும் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் விவாதம் செய்து தான் கொண்டுவர முடியும்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் அவ்வளவு எளிதில் கொண்டுவர முடியாது. காரணம் அரசியல் !
பட்டியல் சாதி சங்கங்கள் இந்தியா முழுக்க போராட்டம், ஆர்ப்பாட்டம் என முன்னெடுத்து ஆளும் கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவார்கள்.
அதனால் எந்த அரசியல் கட்சியும் இந்த சட்டம் தவறாக பயன்படுத்துவது பற்றியோ, SC/ST பிரிவினருக்கு creamy layer என்ற வகைப்பாடு இல்லாமல் இட ஒதுக்கீடு தொடர்ந்து வழங்குவதைப் பற்றியோ வாய் திறப்பதில்லை.
வெறும் 18% பட்டியல் சமுதாயத்தினரின் ஓட்டுக்காக 82% மற்ற சமுதாயத்தினர் பாதிக்கப்படுவதை பற்றி எந்த அரசியல் கட்சியும் கவலைப்படவில்லை.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (SC/ST Prevention of Atrocities Act) கீழ், புகார்தாரருக்கு குற்றத்தின் தீவிரத்தன்மைக்கேற்ப ரூ.85,000 முதல் ரூ.8,25,000 வரை அரசு மூன்று தவணைகளாகப் வழங்கப்படுகிறது
காவல் நிலையத்தில் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கை FIR பதிவு செய்யப்பட்டவுடன் மொத்த தொகையில் 25% வழங்கப்படும்.
காவல்துறையினர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை Charge Sheet தாக்கல் செய்யும் போது 50% வழங்கப்படும்.
கீழமை நீதிமன்றத்தில் குற்றம் சாற்றப்பட்டவர்களுக்குத் தண்டனை உறுதி செய்யும்போது மீதமுள்ள 25% வழங்கப்படும்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (SC/ST Prevention of Atrocities Act) பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தமிழக அரசு மாதம் ரூ.16,950 குடும்ப ஓய்வூதியம், மாற்று வேலை, வேளாண் நிலம் மற்றும் குழந்தைகளின் முழுமையான கல்விச் செலவுகள் போன்றவற்றையும் வழங்குகின்றது
மேலும், நீதிமன்றம் அல்லது ஆணையத்திற்குச் சென்றுவரத் தேவைப்படும் பயணப்படி மற்றும் இதர செலவுகளும் இதில் அடங்கும்.
இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இந்திய நீதித்துறை பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது என்றாலும் தனிநபர் விரோதம் காரணமாக இன்றும் இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது மனித உரிமைகளுக்கு எதிரானது.
இதற்க்கு எல்லாம் ஒரு தீர்வை இப்போது பொறுப்பேற்று இருக்கும் தமிழக வெற்றி கழகம் அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
@CMOTamilnadu @TVKVijayHQ .
அதே சமயம் சமூகநீதியின் பக்கம் நின்று அனைவருக்கும் சமமான நீதி கிடைக்க வழிவகை செய்ய அந்த துரையின் மாண்புமிகு அமைச்சர்
@VanniTamizhVCK அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #அறிவோம்சட்டம் #SCSTAct