Please read & share !
எதற்காக திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது.
2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 505 வாக்குறுதிகளை அளித்தது
ஸ்டாலின் திமுக,
கடந்த 5 ஆண்டுகளில் அவற்றில் வெறும்
66 வாக்குறுதிகளை மட்டும் தான் நிறைவேற்றிஉள்ளது.மீதி 439 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளது.
இப்போது திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 517 வாக்குறுதிகளில் 63 வாக்குறுதிகள் முந்தைய தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தவை தான். அவற்றுக்கு வேறு பெயர்களை சூட்டி புதிய வாக்குறுதிகள் போல காட்டி மோசடி செய்கிறது திமுக.
இதுவே திமுகவின் தோல்வியின் அடையாளம்.
2021-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள மூன்றரை லட்சம் இடங்கள் நிரப்பப்படும்,2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த திமுக, 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கியது.
ஆனால், இப்போது ஒன்றரை லட்சம் அரசு பணியிடங்கள் காலியாகுமாம், அப்போது அந்த இடங்கள் உடனடியாக நிரப்பப்படுமாம்.
இதில் நகைச்சுவை ஏற்கனவே காலியாக உள்ள 6 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை கடந்த 5 ஆண்டுகளில்
நிரப்பத் துப்பில்லாத ஸ்டாலின் திமுக அரசுக்கு இப்படி ஒரு வாக்குறுதி அளிக்க என்ன தகுதி இருக்கிறது.
மேலும்
தனியார் துறைகளில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்; தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 75 விழுக்காட்டை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்க வகை செய்யும் சட்டம் நிறைவேற்றப்படும் என்று
2021 ல் திமுக வாக்குறுதி அளித்திருந்தது.
ஆனால், அந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை;
50 லட்சம் பேருக்கு வேலையும் வழங்கவில்லை.
ஆனால், இப்போது 50 லட்சம் இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வழங்கப்படும் என்ற பழைய வாக்குறுதியையே மீண்டும் அளித்து ஏமாற்ற முயல்கிறது ஸ்டாலின் திமுக.
இத்தகைய மோசடிகளை இளைஞர்கள்
கண்டறிந்து திமுகவை புறக்கணிக்க வேண்டும்.
ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து
நீட் தேர்வை ரத்து செய்வதற்கானது என்று பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றித் தான் கடந்த முறை திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால், நீட் தேர்வை ரத்தும் செய்யாமல், தமிழ்நாட்டிற்கு விலக்கும் பெறாததால் இதுவரை 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மேலும் தற்கொலை செய்த அனிதா பெயரில்
நீட் பயிற்சி மையங்கள், மருத்துவ கல்லூரிகள் துவங்கப்படும் என்று
வாக்குறுதி அளித்தார்கள்.
எதனையும் நிறைவேற்றவில்லை.
ஆனால், கொஞ்சம் கூட தோல்வி உணர்வும், குற்ற உணர்வும் இல்லாமல்,
நீட் என்ற பெயரை மட்டும் தவிர்த்து விட்டு, மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக்கான தேசிய நுழைவுத் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்ய வலியுறுத்துவோம் (வாக்குறுதி எண் 1 (9)) என்று மீண்டும் வாக்குறுதி அளித்திருக்கிறது ஸ்டாலின் திமுக.
அதேபோல், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவோம் என்ற வாக்குறுதியை கடந்த
50 ஆண்டுகளில் 20-ஆம் முறையாக திமுக அளித்திருக்கிறது.
18 ஆண்டுகள் பல்வேறு மத்திய அரசுகளில் அங்கம் வகித்து மத்திய அமைச்சர்களாக
திமுகவை சேர்ந்தவர்கள் பதவிவகித்தும் அதற்காக சிறு முயற்சியும் மேற்கொள்ள வில்லை.
தங்களுக்கு தேவையான இலாகாக்கள் வேண்டும் என்று நிபந்தனை விதித்தவர்கள்
இந்த விஷயத்தில் நிபந்தனை விதித்து காரியத்தை சாதிக்க வில்லை.
ஏன் மத்திய அரசில் பங்கு வகித்த காலத்தில் இது குறித்து பேசக்கூட மாட்டார்கள்.
தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்பாடமாகவும், கட்டாய பயிற்றுமொழியாகவும் நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சி செய்யாத ஸ்டாலின் திமுக, தமிழையும், எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள பிற 21 மொழிகளையும் மத்திய அரசின் ஆட்சி மொழியாக்கப் போவதாக அறிவித்திருப்பது அவல நகைச்சுவையாகும்.
தமிழ்நாட்டின் உணவு தானிய உற்பத்தி
125 லட்சம் டன்னாக உயர்த்தப்படும் என்பதை தேர்தல் வாக்குறுதியாக திமுக அறிவித்திருக்கிறது.
உண்மையில் கடந்த 2023-24ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டின் உணவு உற்பத்தியை 125 லட்சம் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அப்போதைய வேளாண் துறை இயக்குனரும், இப்போதைய வேளாண் துறை செயலாளருமான தட்சிணாமூர்த்தி அறிவித்திருந்தார்.
அதன்பிறகு மூன்று ஆண்டுகளாகியும் அந்த இலக்கை எட்ட முடியாத ஸ்டாலின் திமுக அரசு,
எட்ட முயற்சிக்காத ஸ்டாலின் திமுக அரசு
இப்போது அடுத்த ஐந்தாண்டுகளில் அதனை எட்டுவதற்கான வாக்குறுதியாக அந்த இலக்கை அறிவித்திருப்பது தோல்வியின் வாக்குமூலம் ஆகும்.
@TVKVijayHQ
#VoteForTVK #WhistleForTVK
#WhistleRevolution #தமிழகவெற்றிக்கழகம்
#DMKFailsTN