🚨தேசிய சின்னங்களின் உரிமை - யாருக்கு? யாரிடம்?
சகோதரர் இரத்தினராசா
@RatnaKing20 அவர்களின் கேள்வியை முன்னிறுத்திய பதிவு இது...
போர் மௌனிக்கப்பட்ட பின்னரான இந்த நீண்ட இருளில், ஒரு முக்கியமான கேள்வி ஈழத் தமிழ்ச் சமூகத்தின் முன் நிற்கிறது:
அது,
💥தமிழீழத்தின் தேசிய சின்னங்கள் யாரால், எங்கே, எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும்? அவற்றைப் பயன்படுத்தும் அனுமதியை யாரிடம் பெற வேண்டும்? அல்லது அவற்றைப் பயன்படுத்தவே கூடாதா?
இது வெறும் சின்னங்கள் பற்றிய கேள்வி அல்ல. மாறாக,
இது ஒரு இனத்தின்;
👉அடையாளம்,
👉தியாகம்,
👉வரலாறு மற்றும் எதிர்காலம்..
பற்றிய கேள்வி.
📢இன்று இந்தக் கேள்விக்கு தெளிவான பதில் இல்லாததால்தான், தமிழீழ தேசியக் கொடி, தமிழீழ விடுதலைப்புலிகளின் இலச்சினை, தலைவர் அவர்களின் உருவம் ஆகியவை தனிப்பட்ட உணர்ச்சிக்கும், குழுவாத அரசியலுக்கும், உணர்ச்சிவயப்பட்ட பிம்ப அரசியலுக்கும் கருவிகளாக மாற்றப்பட்டுள்ளன.
இது ஒருவகையில் இது ஆபத்தான சுயமறதியும் கூட..
ஒரு இனத்தின் தேசிய சின்னங்கள் அந்த இனத்தின் கூட்டு ஆன்மா. அவற்றை எவரும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற நிலை உருவானால், அந்த இனம் தன் அடையாளத்தையே இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.
“தேசிய சொத்து” என்ற ஒற்றைச் சொல்லாடல் மூலம், எல்லோரும் எல்லாவற்றையும் பயன்படுத்தலாம் என்ற அரசியல் வெற்றிடம் உருவாகியுள்ளது. இது தேசிய சின்னங்களின் புனிதத்தைச் சிதைப்பதோடு, தமிழினத்தின் அரசியல் தகுதியையும் கேள்விக்குறியாக்குகிறது.
இதற்கு சில உலக விடுதலை இயக்கங்களின் பாடக்களை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஏனெனில், உலக வரலாறு இதற்கு தெளிவான பாடங்களைத் தருகிறது.
💥ஐரிஷ் குடியரசுப் படை (IRA): ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரும், அவர்களின் சின்னங்கள் (Tricolour, Easter Lily) IRA-வின் அரசியல் வாரிசான Sinn Féin போன்ற அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. அவை தனிப்பட்ட உணர்ச்சிக்காக பயன்படுத்தப்படவில்லை.
💥தென் ஆப்பிரிக்க ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் (ANC): அப்பார்தெய்டுக்கு எதிரான போராட்டத்தில் பயன்படுத்தப்பட்ட சின்னங்கள், ANC-வின் அரசியல் கட்டமைப்புக்குள் நிர்வகிக்கப்பட்டன. அவை தனிப்பட்ட அல்லது உணர்ச்சி அரசியலுக்காக தவறாகப் பயன்படுத்தப்படவில்லை.
💥பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO): அவர்களின் சின்னங்கள் இன்றும் PLO-வின் அரசியல் கட்டமைப்புக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த இயக்கங்கள் அனைத்தும் தோற்கடிக்கப்பட்ட பின்னரும், தங்கள் சின்னங்களை தேசிய அரசியல் கட்டமைப்புக்குள் வைத்திருந்தன. ஆனால் ஈழத் தமிழ் சூழலில், புலிகளின் சின்னங்கள் இன்று எவரும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.இது தேசிய சின்னங்களின் புனிதத்தைச் சிதைப்பதோடு, தமிழினத்தின் அரசியல் தகுதியையும் கேள்விக்குறியாக்குகிறது.
இங்கே மிக முக்கியமாக,
“தேசிய சொத்து” என்ற சொல்லாடலின் ஆபத்து பற்றியும் நாம் கவனத்தில் எடுத்தல் அவசியமான ஒன்று என்றே நம்புகின்றேன்.
“புலிகளின் சின்னங்கள் தேசிய சொத்து” என்று சொல்வது எளிது.
ஆனால் அதை நிர்வகிக்கும் பொறுப்பு யாருக்கு?
யார் அதற்கான விதிமுறைகளை வகுக்க வேண்டும்?
இந்தக் கேள்விகளுக்கு பதில் இல்லாதபோது, “தேசிய சொத்து” என்ற சொல்லாடல் தனிப்பட்ட, குழுவாத, உணர்ச்சி அரசியலுக்கான லைசென்ஸாக மாறுகிறது.
ஒரு இனத்தின் அடையாளச் சின்னங்கள், அந்த இனத்தின் சுய திறனாய்வு மற்றும் கூட்டு ஒப்புதல் இல்லாமல் பயன்படுத்தப்படும்போது, அவை தேசிய அடையாளத்தை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, அதைச் சிதைக்கும் கருவிகளாக மாறிவிடுகின்றன.
இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதுவும் இங்கு முக்கியமான தேடலாக அமைகின்றது.
முதலில் ;
ஈழத் தமிழினம் இன்று தன்னைத் தானே மீட்டெடுக்க வேண்டும்.
அதற்கு:
👉தேசிய சின்னங்களை நிர்வகிக்கும் ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
👉அந்தச் சின்னங்களை எப்போது, எப்படி, யார் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான தெளிவான வழிகாட்டிகளை உருவாக்க வேண்டும்
👉சின்னங்களை தனிப்பட்ட அல்லது குழுவாத அரசியலுக்குப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்.
👉இளம் தலைமுறைக்கு அந்தச் சின்னங்களின் வரலாற்று, அரசியல் பொருளை ஆழமாக எடுத்துச் செல்ல வேண்டும்.
நிறைவாக;
தேசிய சின்னங்கள் என்பவை ஒரு இனத்தின் ஆன்மா. அவற்றைத் தனிப்பட்ட உணர்ச்சிக்காக அல்லது குழுவாத அரசியலுக்காகப் பயன்படுத்த அனுமதிப்பது, அந்த இனத்தின் ஆன்மாவைச் சிதைப்பதாகும்.
ஈழத் தமிழினம் இன்று தன்னைத் தானே மீட்டெடுக்க வேண்டுமென்றால்,
முதலில் தன் சின்னங்களை மீட்டெடுக்க வேண்டும்.
அவற்றைப் பாதுகாக்க வேண்டும்.
அவற்றின் புனிதத்தை நிலைநாட்ட வேண்டும்.
ஒரு தேசம் தன் சின்னங்களை இழந்தால், அது தன் அடையாளத்தையே இழந்துவிடும்.
- கிருஸ்ணா அம்பலவாணர்
#TamilEelamFlag #TamilUnity
@RatnaKing20 @leadersinthanai @_outisk