✒️Social Media Influencer ✒️ 👄டைம் பாஸ்🫦

Joined August 2020
14,972 Photos and videos
ஓரு நிமிடம் எனது இதயமே நொருங்கிடிச்சு.! அந்த செல்லத்த பத்திரமா கூட்டிட்டு வாங்கடா 🤰👶
74
1,862
12,447
631,493
டெல்லியைச் சேர்ந்த கணவன், மனைவி தங்களது விவாகரத்து முடிவை மாற்றிக்கொண்ட நெகிழ்ச்சியான சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரது இதயங்களை வென்றுள்ளது. அந்தத் தம்பதியினர் விவாகரத்து கோரி வழக்குத் தொடர்வதற்காக டெல்லி நீதிமன்றத்திற்கு வெளியே வந்திருந்த சமயம் பார்த்து, எதிர்பாராதவிதமாக அந்தப் பெண்ணின் தந்தைக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாகத் தனது தந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்தத் துயரமான செய்தியைக் கேள்விப்பட்ட கணவர், நீதிமன்றத்திற்குள் செல்வதைத் தவிர்த்துவிட்டு, உடனடியாகப் பதறியடித்தபடி மருத்துவமனைக்கு ஓடிவந்துள்ளார். அங்குத் தனது மாமனாருக்குத் தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் முன்னின்று கவனித்துக் கொண்டதுடன், மிகச் சிறந்த முறையில் அவரைப் பராமரித்துள்ளார். கணவனின் இந்த அன்பான செயலையும், இக்கட்டான சூழலில் அவர் காட்டிய அக்கறையையும் கண்டு அந்தப் பெண் உணர்ச்சிவசப்பட்டுப் போயுள்ளார். அடுத்த கணமே, தான் கையில் வைத்திருந்த விவாகரத்துப் பத்திரங்களை அங்கேயே கிழித்தெறிந்த அந்தப் பெண், தனது கணவரை நெகிழ்ச்சியோடு கட்டியணைத்துக் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணமான இவர்களுக்குள், திருமணமான சில நாட்களிலேயே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுப் பிரிந்து வாழும் சூழல் உருவானது. இவர்களது சண்டையின் தாக்கம் பெண்ணின் தந்தையின் உடல்நிலையைப் பாதித்திருந்த நிலையில், தற்போது தங்களது அனைத்துக் கோபங்களையும் மறந்து இருவரும் மீண்டும் இணைந்து வாழ முடிவெடுத்துள்ளனர். “துன்பக் காலத்தில் தோள் கொடுத்து நிற்பவரே உண்மையான சொந்தம்” என்பதை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.
4
21
115
8,755
கே.பாக்யராஜ் சார் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட திரை வைரம் – ஆர். பாண்டியராஜன்! 🌾❤️ "ஆண் பாவம்" – சிரிக்க வைத்தபடியே வாழ்க்கையை கற்றுக்கொடுத்த ஒரு காலத்தால் அழியாத காவியம்! இன்று தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான செலவில் பிரம்மாண்ட படங்கள் உருவாகின்றன. தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. காட்சிகள் மெருகேறியுள்ளன. ஆனால், நாற்பது ஆண்டுகளுக்கு முன் வெளியான சில படங்கள் மட்டும் காலத்தைக் கடந்தும் மக்களின் மனங்களில் வாழ்கின்றன. அவற்றில் முதன்மையான இடத்தைப் பெறும் திரைப்படம் "ஆண் பாவம்". அதற்குக் காரணம் அதன் எளிமை... அதன் இயல்புத்தன்மை... அதன் மனிதநேயம்! இந்தப் படத்தில் நடித்தவர்கள் நடிகர்களாகத் தெரியவில்லை; நம் வீட்டுக்கு அடுத்த வீட்டில் வாழும் மனிதர்களாகவே தோன்றுகிறார்கள். இயக்குநர் பாண்டியராஜனுக்கு இது இரண்டாவது படம். நடிகை ரேவதிக்கும் ஆரம்பகாலப் படங்களில் ஒன்று. ஆனால் திரையில் அவர்கள் காட்டிய முதிர்ச்சி இன்று கூட வியக்க வைக்கிறது. இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் அதன் வசனங்கள். சிரிக்க வைத்தபடியே சிந்திக்க வைக்கும் வசனங்கள். எளிமையாகச் சொல்லப்பட்டாலும், வாழ்க்கையின் ஆழமான உண்மைகளை எடுத்துரைக்கும் வசனங்கள். அவற்றில் மறக்க முடியாத ஒன்று... கிராம மக்களிடம் விரக்தியுடன் வி.கே. ராமசாமி பேசும் காட்சி: > "ஒரு கோயில் கட்டினேன்... நீங்க யாரும் சாமி கும்பிட வரல... பள்ளிக்கூடம் கட்டினேன்... படிக்க வரல... குளம் வெட்டினேன்... குளிக்க வரல... ஆனா சினிமா கொட்டகையைக் கட்டினேன்... கொட்டுமேளத்தோட என்னை வரவேற்கறீங்க!" நகைச்சுவையாகச் சொல்லப்பட்டாலும், சமூகத்தின் மனநிலையை மிகத் துல்லியமாகக் குத்திக்காட்டும் வசனம் அது. பொழுதுபோக்கை நேசிக்கும் மனித இயல்பையும், அத்தியாவசிய விஷயங்களை சில நேரங்களில் புறக்கணிக்கும் சமூக மனப்பான்மையையும் ஒரே வரியில் பதிவு செய்துவிடுகிறது. அதேபோல், படத்தின் கிளைமாக்ஸ்... ரேவதி பேச முடியாத நிலைக்கு சென்ற பிறகு, அவரைப் பார்க்க வரும் வி.கே. ராமசாமி கூறும் வார்த்தைகள்: > "எங்க வீட்டுலேயும் சாமி படங்க இருக்கு... எந்த சாமியும் பேசாது... அதுக்காக அதையெல்லாம் வெளில தூக்கிப் போட்டுட்டோமா?" இந்த ஒரு வரியில் எவ்வளவு ஆறுதல்! எவ்வளவு அன்பு! எவ்வளவு மனிதநேயம்! ஒரு பெண்ணின் குறையை காரணம் காட்டி அவளை ஒதுக்காமல், "நீ இப்போதும் எங்களுக்கு மதிப்புமிக்கவள்தான்" என்று சொல்லும் உயர்ந்த மனப்பான்மை அதில் வெளிப்படுகிறது. அதற்குப் பிறகு வரும் மற்றொரு மறக்க முடியாத வசனம்: > "இங்காருக்க... எங்க பரம்பரைக்கு இடிக்கும் போது ஒன்னு, பொடைக்கும் போது ஒன்னு பேசமாட்டோம்ங்க... குத்தும் போது என்னவோ, அள்ளும் போதும் அதேதாங்க..." இது ஒரு குடும்பத்தின் பெருமையை மட்டும் பேசவில்லை. ஒரு தலைமுறையின் குணாதிசயத்தையே பேசுகிறது. படிப்பு இல்லாமல் இருக்கலாம்... பணம் இல்லாமல் இருக்கலாம்... ஆனால் கொடுத்த வாக்கை உயிராகக் காத்த மனிதர்கள் இருந்தார்கள். சூழ்நிலை மாறினாலும் நிலைப்பாட்டை மாற்றாதவர்கள் இருந்தார்கள். நல்ல நேரத்தில் ஒரு பேச்சு, கெட்ட நேரத்தில் ஒரு பேச்சு பேசாதவர்கள் இருந்தார்கள். அந்த தலைமுறையின் வாழ்வியல் மதிப்புகளுக்கு சாட்சியாக நிற்கும் திரைப்படம் தான் "ஆண் பாவம்". பாண்டியராஜனின் அப்பாவித்தனமான நகைச்சுவை... பாண்டியனின் இயல்பான நடிப்பு... ரேவதியின் உணர்வுபூர்வமான வெளிப்பாடு... வி.கே. ராமசாமியின் அற்புதமான கிராமத்து தந்தை கதாபாத்திரம்... இவை அனைத்தும் சேர்ந்து இந்தப் படத்தை ஒரு திரைப்படமாக அல்ல, ஒரு வாழ்க்கை அனுபவமாக மாற்றுகின்றன. இன்றைய Gen Z தலைமுறையினர் இந்தப் படத்தைப் பார்த்தால், அவர்கள் ஒரு பழைய படத்தைப் பார்ப்பதில்லை. இன்று தேடித் தேடியும் அரிதாகக் கிடைக்கும் மனிதர்களைப் பார்ப்பார்கள். உறவுகளுக்கு மதிப்பு கொடுத்த மனிதர்களை... வாக்குறுதிகளை உயிராக நினைத்த மனிதர்களை... குறைகளை விட குணங்களை நேசித்த மனிதர்களை... "ஆண் பாவம்" ஒரு நகைச்சுவைப் படம் மட்டுமல்ல. அது தமிழர் கிராமிய வாழ்க்கையின் மண்வாசனை... உறவுகளின் வெப்பம்... மனிதநேயத்தின் ஆழம்... கொடுத்த வாக்கின் மதிப்பு... இவற்றை காலத்திற்காக பதிவு செய்து வைத்திருக்கும் ஒரு உயிருள்ள நினைவகம். இன்றைய தலைமுறையினருக்கு ஒரு வேண்டுகோள்... ஒருமுறை "ஆண் பாவம்" படத்தைப் பாருங்கள். நீங்கள் ஒரு கதையை மட்டும் பார்க்க மாட்டீர்கள். இன்று தேடியும் கிடைக்காத மனிதர்களையும்... உறவுகளையும்... வாழ்க்கை மதிப்புகளையும் பார்த்துவிட்டு வருவீர்கள். சில படங்கள் வெற்றி பெறும்... சில படங்கள் காலத்தை வெல்லும்... "ஆண் பாவம்" காலத்தை வென்ற திரைப்படம்! 🌾❤️
25
90
396
52,241
முப்பது வயச தொட்ட உடனே பொண்ணு வீட்டுல ஜாதகம் Reject ஆகும் வேலைக்கு போனா Application Reject ஆகும் என்னது முப்பது வயசாச்சி இன்னும் கல்யாணம் ஆகலயானு நாலு Baby Boomer காது பட பேசுவாங்க ஆனா , இது எல்லாத்தையும் துடைச்சி போட்டுட்டு தனக்குனு ஒரு குடும்பம் உருவாக்கிக்காம தன் குடும்பத்துக்காக ஒருத்தன் ஓடுறான் பாரு அவன் தான் Bachelor .......!!! #29Movie
1
8
87
10,718
✨💥கைப்புள்ள💥✨ retweeted
தொழில்நுட்ப கோளாறு தான் காரணம்.. அரசுக்கு சம்பந்தம் இல்லை - 3 சேனல்கள் முடக்கம் குறித்த கேள்விக்கு அமைச்சர் @CTR_Nirmalkumar விளக்கம் ...
2
6
533
✨💥கைப்புள்ள💥✨ retweeted
இந்த வீடியோவை download பண்ணி insta,facebook, whatsapp ல வைங்க மத்தது தானகவே நடக்கும் ❤️😂 Upis Vs @TANGEDCO_Offcl Be Like 👇
2
6
327
✨💥கைப்புள்ள💥✨ retweeted
"மின்வெட்டு பிரச்சினை - நள்ளிரவில் அமைச்சர் ஆய்வு.." தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் நள்ளிரவில் ஆய்வு செய்த அமைச்சர் @CTR_Nirmalkumar ... சென்னை மற்றும் புறநகர்களில் மின்வெட்டு பிரச்சினை குறித்து கட்டுப்பாட்டு மையப் பணியாளர்களிடம் கேட்டறிந்தார்... #CTRNirmalKumar
1
3
5
281
✨💥கைப்புள்ள💥✨ retweeted
எலக்சன் தான் முடிஞ்சிருச்சே…இனிமேலாவது கேரியரை பாருங்கடானு சொன்னா..!! ப்பூஸ் கேரியரை கவ்விட்டு திரியிரானுங்க 🤣🤣
1
11
338
தேனி மாவட்டம் கே.கே.பட்டியைச் சேர்ந்த இந்திய இராணுவ வீரர், லான்ஸ் நாயக் A. மீனாட்சி சுந்தரம் அவர்கள், நாட்டின் பெருமையை உலகறியச் செய்துள்ளார். தென் காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது, முகம் மற்றும் மார்பு பகுதியில் எதிரிகளின் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையிலும், உயிரைப் பொருட்படுத்தாமல் வீரத்துடன் போராடி, பயங்கரவாதியை நேருக்கு நேர் எதிர்கொண்டு அழித்ததோடு தனது குழுவினரின் உயிரையும் காப்பாற்றினார். அவரது அசாதாரண துணிச்சல், தன்னலமற்ற தியாக உணர்வு மற்றும் நாட்டுப்பற்றை பாராட்டி, இந்தியாவின் உயரிய அமைதிக்கால வீர விருதுகளில் ஒன்றான கீர்த்தி சக்கரா விருது மேதகு குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது. இது தேனி மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கும் பெருமை சேர்க்கும் தருணமாகும். வீரத்தின் மறுபெயராக திகழும் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும், வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். "நாட்டிற்காக உயிரையும் துச்சமாக எண்ணி போராடும் வீரர்களே நம் தேசத்தின் உண்மையான நாயகர்கள்." **ஜெய் ஹிந்த்! 🇮🇳**
5
11
66
468
🇮🇳 "து*ப்பாக்கிக்கு முன் தலைகுனியவில்லை... தீ*விரவாதியையே வீழ்த்தினார்!" 2009 செப்டம்பர் 27-ம் தேதி இரவு, ஜம்மு காஷ்மீரின் மலைப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த சம்பவம் இந்தியாவையே வியக்க வைத்தது. அப்போது வெறும் 20 வயதான ருக்சானா கவ்சர், தனது பெற்றோர் மற்றும் சகோதரர் ஐஜாஸுடன் வீட்டில் இருந்தார். அந்த நேரத்தில் பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தீ*விரவாத அமைப்பின் கமாண்டர் அபு ஒசாமா மற்றும் அவரது கூட்டாளிகள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். மலைப்பகுதிகளில் ஒளிந்திருந்த தீவிரவாதிகள், உள்ளூர் மக்களின் வீடுகளை மிரட்டி உணவு மற்றும் தங்குமிடமாக பயன்படுத்துவது வழக்கம். அதுபோலவே ருக்சானாவின் வீட்டையும் அவர்கள் கைப்பற்ற முயன்றனர். மேலும், ருக்சானாவை தங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிய அவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது பெற்றோரை கண்முன்னே இரக்கமின்றி தாக்கத் தொடங்கினர். தனது தாய், தந்தை ரத்தம் சொட்டும் அளவுக்கு அடிக்கப்படுவதை பார்த்த ருக்சானா, பயந்து ஒதுங்கவில்லை. வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து, எதிர்பாராத விதமாக தீ*விரவாத கமாண்டர் அபு ஒசாமா மீது பாய்ந்து தாக்கினார். கடுமையாக காயமடைந்து கீழே விழுந்த அபு ஒசாமாவின் கையிலிருந்த AK-47 துப்பாக்கியை பறித்த ருக்சானா, தனது சகோதரர் ஐஜாஸுக்கும் ஒரு கம்பை கொடுத்து துணையாக நிற்கச் செய்தார். பின்னர் கைப்பற்றிய AK-47 துப்பாக்கியால் அபு ஒசாமாவை சுட்டுக் கொ*ன்றார். கமாண்டர் கொ*ல்லப்பட்டதும், மற்ற தீவிரவாதிகள் பதற்றமடைந்தனர். அவர்களையும் நோக்கி ருக்சானா து*ப்பாக்கிச் சூடு நடத்தியதால், காயமடைந்த அவர்கள் இருளில் தப்பி ஓடினர். சம்பவத்திற்குப் பிறகு ருக்சானாவும் அவரது குடும்பத்தினரும் உடனடியாக காவல் நிலையத்திற்குச் சென்று ஆயுதங்களை ஒப்படைத்து நடந்ததை தெரிவித்தனர். ஒரு சாதாரண இளம் பெண், AK-47 ஏந்திய தீவிரவாத கமாண்டரை நேருக்கு நேர் எதிர்கொண்டு வீழ்த்திய செய்தி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீவிரவாதத்திற்கு எதிராக போராடும் மக்களுக்கு இது மிகப்பெரிய தன்னம்பிக்கையை அளித்தது. அவரது அபாரமான வீரத்தையும் தைரியத்தையும் பாராட்டி, 2010 குடியரசு தினத்தில் இந்தியாவின் உயரிய அமைதிக்கால வீர விருதுகளில் ஒன்றான "கீர்த்தி சக்கரா" விருது வழங்கப்பட்டது. அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் அவர்களிடமிருந்து ருக்சானா இந்த விருதைப் பெற்றார். இந்த சம்பவத்திற்குப் பிறகும் லஷ்கர் தீ*விரவாதிகளிடமிருந்து ருக்சானாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்தன. பழிவாங்கும் நோக்கில் அவர்களின் வீடும் கு*ண்டுவைத்து தாக்கப்பட்டது. இதையடுத்து அரசு பாதுகாப்பு வழங்கி, அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியது. இன்று ருக்சானா கவ்சர் சட்டம் மற்றும் ஒழுங்கைக் காக்கும் பணியில் நாட்டிற்கு சேவை செய்து வருகிறார். அநீதிக்கு எதிராக எழுந்து நிற்கும் மன உறுதியும், அசைக்க முடியாத தைரியமும் இருந்தால் எந்த ஆயுதத்தையும் விட அது பெரிய சக்தி என்பதை தனது வாழ்க்கையால் நிரூபித்த இந்தியாவின் வீர மகள் – ருக்சானா கவ்சருக்கு நமது வீர வணக்கங்கள்! 🇮🇳🙏
6
12
94
1,513
விசித்திரமான அனுபவமான்னு தெரில, ஆனா இத படிக்கிறவங்களுக்கு கண்டிப்பா வேடிக்கையான அனுபவத்தை குடுக்கும்னு நம்புறேன். சிரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் :) ஸ்கூல்லயும் சரி, காலேஜ்லயும் சரி , எனக்கு இந்த பிட் அடிக்கிறதுக்கு, காபி அடிக்கிறதுக்குலாம் சுத்தமா தைரியமே இல்லீங்க. பரிட்சை ஹாலுல பின்னாடி உக்காந்திருக்க நண்பன் ஆன்சர் கேட்டாலும் எனக்கு நேக்கா சொல்லவும் தெரியாது. அப்படி ஒரு பயந்தான் கொள்ளி நான். ஆறாவது படிக்கிறப்போ அரையாண்டு விடுமுறை முடிஞ்சு திரும்ப ஸ்கூலுக்கு போன முதல் நாள் முதல் பீரியட்ல எல்லா பாடத்தோட திருத்திய அரையாண்டு விடைத்தாள்களை குடுத்தாங்க. கிளாஸ் டீச்சர் ரேங்க் போடுறதுக்கு முன்னாடியே நல்லா படிக்கிற பசங்க எங்களுக்குள்ளயே டோடல் போட்டு நாங்களே யார் யார் என்னென்ன ரேங்க்னு கண்டுபுடிச்சிடுவோம். அப்படி நாங்களே ரேங்க் போட்டு முடிச்சதுக்கு அப்பறம், ஒவ்வொரு சப்ஜெக்ட்லயும் யாரு டாப்பர் னு எங்களுக்குள்ள டிஸ்கஷன் ஓடுச்சு. கணிதத்துல யாரு டாப்பர் னு பேச்சு வந்தப்போ தான் என்னோட என்ட்ரி அதாவது ஹீரோ என்ட்ரி. 95 மார்க்ஸ் வாங்கியிருந்தேன். எங்க பசங்களுக்கு என்னப்பத்தி நல்லா தெரியும், எப்படி எனக்கு காபி அடிக்க வராதோ அதே மாதிரி Mathsஉம் வராதுன்னு. அப்டி இருக்குறப்போ இவன் எப்படி டாப்பரா வந்தான்னு எல்லாருக்கும் ஆச்சர்யம். பேப்பர் eh குடுடானு வாங்குனானுங்க. மோத பக்கம் சூஸ் தி கரெக்ட் ஆன்ஸர்லயே 5 தப்பு. அடுத்த பக்கம் 2 மார்க் கொஸ்டின் ல 2 தப்பு. டோடல் பண்ணி பாத்தா 95 வருது, எல்லாருக்கும் செம ஷாக், ஆச்சர்யம் எப்படினு . என்னடா பண்ணணு கேட்டானுங்க ,அப்போ தான் என்னோட யுக்தியை சொன்னேன். எனக்கு கரெக்ட்னு தெரிஞ்ச ஒரு 2 மார்க் கொஸ்டின்க்கு விடைத்தாளுல மூணு வெவ்வேறு எடத்துல கொஸ்டின் நம்பர போட்டு ஆன்சர் எழுதி வச்சிட்டேன். வாத்தியாரும் திருத்தி மார்க் போட்டுட்டாரு. 300 பேப்பர் திருத்துற வாத்தியாருக்கு கண்டிப்பா எத்தனை தடவ எழுதிருக்கேன்னு யோசிக்கவோ பாக்கவோ டைம் இருக்காது. பிட் அடிக்கிறது காபி அடிக்கிறதுல ரிஸ்க் இருக்கு , இதுல ரிஸ்க் சுத்தமா இல்லனு சொன்னேன். இத கேட்டதும் பசங்க ஆடி போய்ட்டானுங்க, காபி அடிக்க கூட தெரியாத இவனுக்கா இவ்வளவு திறமைனு ஆடிபோய்ட்டானுங்க. நானும் கெத்தா எதையோ சாதிச்ச பீல் ல வீட்டுக்கு போய்ட்டேன். இப்போ தான் கதைல பெரிய ட்விஸ்டு. அடுத்த நாள் காலைல வழக்கம் போல ஸ்கூலுக்கு போனேன்,First Period நடக்குறப்போ சி செக்ஷன் பையன் கிளாஸ்க்குள்ள வந்து "Excuse Sir,Our Maths sir is calling A Bharath Kumar னு சொன்னான்". எனக்கு உள்ளுக்குள்ள ஒரு சந்தோசம் ,Mathsல கிளாஸ் Topper eh வந்ததால பாராட்ட கூப்பிடறாரு போலன்னு நெனச்சுட்டு நானும் போனேன். புன்னகை பூத்துக்கிட்டே உள்ள நொழஞ்சேன்.நொழஞ்ச அடுத்த வினாடி இடியுடன் கூடிய பலத்த மழை,அப்படி ஒரு தாக்குதல் எனக்கு நடந்துச்சு .ஏன் சார் அடிக்கிறீங்க னு கேக்க கேக்க அடி பின்னி எடுத்துட்டாரு .அப்பறமா அவர் கை வலிச்சு ரெஸ்ட் எடுக்குறப்போ தான் சொன்னாரு, ஏன்டா இப்டி ஒரு கேள்விக்கு மூணு எடத்துல ஆன்சர் எழுதி என்னையே ஏமாத்திட்டல, சொன்னப்போ அந்த கிளாஸ் பசங்க என்ன ஹீரோ ரேஞ்சுக்கு பாத்தானுங்க.அப்புறம் சாரே,போடா கிளாஸ்சுக்கு அனுப்பிவிட்டாரு. நானும் ஒன்னும் நடக்காத மாதிரி என் கிளாஸ்சுக்கு போய்ட்டேன். இன்டெர்வல் பிரேக் ல பசங்க என்னடா ஆச்சுன்னு கேட்டானுங்க. "துரோகிகளா எவனோ ஒரு எட்டப்பன் என்ன போட்டு குடுத்துட்டான், சார் அடி பின்னிடார்"னு சொன்னேன். எல்லாரும் சிரிக்க ஆரமிச்சிட்டானுங்க. இந்த சம்பவத்துக்கு அப்புறம் எங்க ஸ்கூல்ல எல்லா ஆசிரியர்களும்,திருத்திய விடைத்தாள்களை பல முறை பரிசோதனை செய்த பின்னே மாணவர்களுக்கு வழங்க ஆரம்பித்தனர். ஆனா விதை நான் போட்டது...
7
13
138
16,693
✨💥கைப்புள்ள💥✨ retweeted
இன்று மின்வாரிய தலைமை அலுவலகத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகிர்மான அளவில் ஏற்படும் பழுது மற்றும் இதர காரணங்களால் எதிர்பாராமல் ஏற்படும் மின் தடங்கல்களை உடனடியாக சீர் செய்யும் வகையில் 125 சிறப்பு மின்தடை பழுது சரிசெய்யும் ரோந்து வாகனங்களின் இயக்கத்தினை துவக்கிவைக்கப்பட்டது. இந்த 125 ரோந்து வாகனங்களில் பழுதுகளை சரிசெய்ய தேவையான உபகரணங்கள் மற்றும் ரோந்து பணியில் தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் பணியமர்த்த பட்டுள்ளனர். இதை கண்காணிக்க 10 உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. @CMOTamilnadu @TANGEDCO_Offcl
89
1,389
4,918
90,530
இந்தியா எங்கள் நாட்டின் மீது மறைமுகமாக போர் தொடுக்கிறது எங்களை சுற்றி இருக்கும் எதிரி நாடுகளான கிரீஸ், ஆர்மீனியா, சைப்ரஸ் நாடுகளுக்கு அதி நவீன ஏவுகணைகளான பிரமோஸ், பினாக்கா போன்ற ஆயுந்தங்களை வழங்கி உள்ளது மேலும் 1000 to 1500 km தூரத்திற்கு சென்று தாக்கும் ஏவுகணை வழங்கியுள்ளதால் எங்கள் நாடு முழுவதும் இப்பொழுது எதிரி நாடுகளின் ஏவுகணை தாக்குதல் எல்லைக்குள் அமைந்துள்ளது. இதனால் எங்கள் நாடு மகிழ்ச்சியாகவே இல்லை ஒட்டுமொத்த துருக்கி மீடியாக்களும் கதறல் Simply அவ பொருள எடுது அவனையே .......
21
141
651
28,731
"சுவரில்லாத சித்திரங்கள்" படத்தில் கல்லாப்பெட்டி சிங்காரம், கவுண்டமணியின் டைலர் கடை காட்சியில் பேசும் உரையாடல் படு யதார்த்தமானது : ரொம்ப பிடித்த நகைச்சுவை காட்சிகளில் ஒன்று! பாக்கியராஜ் சாரின் வசனங்களோடு கல்லாப்பெட்டி சிங்காரம், கவுண்டமணி என்ற இரண்டு அற்புதமான நடிகர்களின் உடல்மொழியும்,நடிப்பும்,டைமிங் சென்ஸூம் வெடித்துச் சிரிக்க வைத்துவிடும். "என்னடா காளிண்ணா ஊதுவத்தியெல்லாம் பலமா இருக்கு?" "மொடங்க பாய் இல்லங்கறதுக்காக சடங்க நிறுத்த முடியுங்களா?" "அதெப்புடி" "வியாபாரம் வருதோ இல்லியோ விடியகால்ல கடையத் தொறந்து வச்சுக்கிட்டு உக்காந்துர வேண்டியதுதான்.. வேப்பங்காய்க்கு கூட நாலு காக்கா வருது, தெக்கையும் வடக்கையும் பாக்கறேன் சுத்தி கடங்காரன்தான் வர்றான்" "என்னடா காளிண்ணா எப்பப் பாத்தாலும் இப்படி சலிச்சுக்கிறியே! ஏண்டா வெளையும்போதே சோறா வெளஞ்சிட்டா அப்புறம் வெறகெதுக்கு? வறட்டிதான் எதுக்கு? கஷ்டம்ங்கறது எல்லாத்துக்கும் வரத்தாண்டா செய்யும்" "என்னமோ போங்க கடைய சூலூருக்கே மாத்திடலாம்னு இருக்கேன்" "எது சூலூருக்கு மாத்திறியா..? ஏன்டா காளிண்ணா கண்ணடிச்சா வராத பொம்பள கையப் பிடிச்சு இழுத்தா வந்துடவாப் போறா?" (சரியாக அப்போது..பின்னால் அவரது மனைவி காந்திமதி வந்து நிற்பார்)
3
32
222
20,761