காலநிலையும் ஒருங்கிணைந்த நலனும் கருத்தரங்கம்.
எந்திரகதியிலான நம் வாழ்வில் இதனை அவதானிக்க மறந்தாலும்கூட நம் வாழ்வின் நலன் இவ்வுலகின் நலனோடு இறுக்கிக் கட்டப்பட்டிருக்கிறது. இவ்வுலகின் 850 கோடி மக்களும் ஒரே சிலந்தி வலையைப் போல பின்னிப் பிணைந்த வாழிடத்தில் இருக்கிறோம். ஆகவேதான், அதன் ஏதோவொரு மூலையில் நிகழும் அதிர்வு நம் சமையலறைகளிலும் அடிவயிற்றிலும்கூட எதிரொலிக்கிறது.
ஏதோவொரு தொழிற்சாலையின் உமிழ்வு, எங்கோ கொட்டப்படும் குப்பை, ஏதோவொரு காட்டில் எரியும் நெருப்பு, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உருகும் பனி, ஊருக்கு வெளியே கொட்டப்படும் குப்பை இவை எல்லாமே நம் வாழ்வில் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. பல நேரங்களில் அவை மரண அடியாய் நம்மீது விழுகின்றன.
கடும் வெப்பம் மனிதர்களின் உற்பத்தித் திறனைப் பாதிக்கிறது; வாழ்வாதாரங்களையும் பொருளாதாரத்தையும் முடக்குகிறது; செல்வந்தர்களை விடவும் எளிய மக்களை அதிகமாகப் பாதிக்கிறது. பருவம் தவறிய மழையோ நிலத்தின் உற்பத்தியைக் குறைத்து விவசாயிகளையும் உணவுப் பாதுகாப்பையும் அச்சுறுத்துகிறது. கடல்மட்ட உயர்வு கடலோர கிராமங்களைக் அரித்துச் செல்கிறது. கடல் நீரோட்டங்களின் சீர்குலைவும், புயல்களும் மீனவர் வாழ்வை கண்ணீரில் கரையச் செய்கின்றன. காலநிலை மாற்றம் இனிமேலும் சுற்றுச்சூழல் பிரச்சினை அல்ல; மாறாக, நீதியை மையமாகக் கொண்ட சமூக – அரசியல் – பொருளாதாரப் பிரச்சினையாக இது தன்னை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்து. இது நமது பிழைத்திருத்தல் சார்ந்த பிரச்சினையும்கூட.
உறுப்புகள் பலவாக இருப்பினும் உயிர் ஒன்று; எந்தவொரு உறுப்பின் செயலிழப்பும்கூட உயிரிழப்பாக மாறலாம். இங்கு பொருளாதார நலன், சமூக நலன், விலங்கு நலன், சூழல் நலன் என்று தனித்தனியான நலன்கள் எதுவும் இல்லை; மாறாக, ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த ஒரே பூவுலகும் அதன் பகிரப்பட்ட ஒரே நலனும் மட்டுமே இருக்கின்றது.
இந்த ஒருங்கிணைந்த நலனைப் பேசுபொருளாக மாற்ற முயலும் பூவுலகின் நண்பர்களின் இந்த முழுநாள் நிகழ்வில் கலந்துகொள்ள உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்.
நிகழ்வில் கலந்துகொள்ள கீழே உள்ள இணைப்பில் பதிவு செய்யவும்: 👇🏾
forms.gle/ct8YUqZVdFZ2WUmR8
#Climatechange #environmentalism #ecology #Poovulaginnanbargal