புதுச்சேரியை 'சிங்கப்பூர்' போல மாற்றுவது மற்றும் அதன் ஒட்டுமொத்த வளர்ச்சி குறித்து, இன்று ஆளுநர் மாளிகையில் ஆளுநர் திரு. கைலாஷ்நாதன் அவர்கள் மற்றும் சிங்கப்பூர் சிபிஜி கார்ப்பரேஷன் குழுவினருடன் இணைந்து முக்கிய கலந்துரையாடல் நடத்தினேன். இக்கூட்டத்தில், புதுச்சேரியின் எதிர்கால உள்கட்டமைப்பு மேம்பாடு, திட்டமிட்ட நகர்ப்புற வளர்ச்சி மற்றும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், புதுச்சேரியின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், சர்வதேச அனுபவம் கொண்ட நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது குறித்து உரையாடினோம்.
#SingaporeCPG#CityTransformation#FuturePuducherry#josecharlesmartinMLA#LatchiyaJananayagaKatchi
புதுச்சேரி - காமராஜ் நகர் தொகுதியில் உள்ள கிருஷ்ணா நகர் முதல் தெரு Extention-ல் தினசரி மின் பிரச்னை ஏற்படுவதாக
மக்கள் புகார் தெரிவித்தனர். உடனடியாக இதனை சரி செய்ய உத்தரவிட்டதின் அடிப்படையில், புதியதாக டிரான்ஸ்ஃபார்மர் அமைக்கப்பட்டது. அதனை ஆய்வுசெய்தேன். புதிதாக டிரான்ஸ்ஃபார்மர் அமைக்கப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
#KamarajNagar#PowerInfrastructure#TransformerInstallation#PublicService#PeopleFirst
புதுச்சேரி - காமராஜ் நகர் தொகுதியிலுள்ள கருவடிக்குப்பம் - காமராஜர் மணிமண்டபத்தில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் மற்றும் காமராஜ் நகர் தொகுதியின் எம்.எல்.ஏ என்கிற முறையில் சென்றேன். அப்போது நீட் மற்றும் போட்டித்தேர்வுகளுக்குப் படிக்கும் மாணவர்களுக்கு இலவச வகுப்புகள் எடுக்க இருக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்தேன். உடன் லஜக நிர்வாகிகள் இருந்தனர்.
#KamarajNagar#NEETCoaching#FreeEducation#StudentDevelopment#LJK
புதுச்சேரி - காமராஜ் நகர் தொகுதியில் உள்ள
சங்கரதாஸ் சுவாமிகள் நகர், 3-வது குறுக்குத்தெருவில் உள்ள ஸ்ரீநாகமுத்து மாரியம்மன் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தேன். அப்போது அந்த ஊர்ப்பொதுமக்கள் கோயிலின் தளம் கட்டுவதற்கு உதவுமாறு கேட்டுக் கொண்டனர். உடனடியாக அதை செய்வதற்கு ஆவன செய்வதாக உறுதி அளித்தேன்.
#TempleSupport#PublicService#JoseCharlesMartin#Puducherry#PoliticalEvent
சுயநலமற்ற மனதோடு ரத்ததானம் வழங்கி, அவசரக் காலங்களில் பல நூறு உயிர்களைக் காத்து நிற்கும் தன்னலமற்ற கொடையாளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த உலக ரத்ததான தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் செய்யும் ஒவ்வொரு ரத்ததானமும் ஒரு தனிமனிதனின் மறுவாழ்வுக்கான உத்தரவாதம் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமூகத்திலும் மனிதநேயத்தை உயிர்ப்போடு வைத்திருக்கும் உன்னதச் செயலாகும்; எனவே, தகுதியுள்ள அனைவரும் தொடர்ச்சியாக ரத்ததானம் செய்வதை ஒரு சமூகக் கடமையாக ஏந்தி, மண்ணில் மனிதம் காக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம்.
#WorldBloodDonorDay#DonateBloodSaveLives#Puducherry#JoseCharlesMartinmla#LakshiyaJananayagaKatchi
லட்சிய ஜனநாயக கட்சியின் சார்பில், உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு நாளை (14/06/2026) காலை 9:00 மணியளவில் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிறப்பு ரத்த தான முகாம் நடைபெற உள்ளது. காமராஜ் நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் தலைமையில் நடைபெறும் இம்முகாமில், அனைவரும் சேர்ந்து ரத்த தானம் செய்வோம்... மக்களைக் காப்போம்! வாருங்கள், குருதி கொடுப்போம்... உயிர்களைக் காப்போம்!
#WorldBloodDonorDay#DonateBloodSaveLives#Puducherry#JoseCharlesMartin#LakshiyaJananayagaKatchi
புதுச்சேரி - காமராஜ் நகர் தொகுதியில் உள்ள R.V.நகர் மொட்டைதோப்பு பகுதியைச் சேர்ந்த சகோதரர் கார்த்திகேயன் பிறந்தநாள் விழாவில் நட்புரீதியாக கலந்துகொண்டு,
கேக் வெட்டி, பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இந்நிகழ்ச்சியில் மாணவ - மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினேன். மேலும், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் காமராஜ் நகர் தொகுதி சட்டப்பேரவைத் தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். உடன் LJK மற்றும் NDA கூட்டணி முக்கிய நிர்வாகிகள் இருந்தனர்.
#KamarajNagar#Puducherry#LJKNDAAlliance#CommunityService#BirthdayCelebration
லட்சிய ஜனநாயக கட்சியின் சார்பில், உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு நாளை (14/06/2026) காலை 9:00 மணியளவில் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிறப்பு ரத்த தான முகாம் நடைபெற உள்ளது. காமராஜ் நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் தலைமையில் நடைபெறும் இம்முகாமில், அவரோடு நாமும் கைகோர்த்து, பெருமளவில் கலந்துகொண்டு ரத்த தானம் செய்வோம்; மனித உயிர்களைக் காப்போம்! வாருங்கள், குருதி கொடுப்போம்... உயிர்களைக் காப்போம்!
#WorldBloodDonorDay#DonateBloodSaveLives#BloodDonationCamp#JoseCharlesMartinmla#PuducherryForHumanity
புதுச்சேரி - காமராஜ் நகர் தொகுதியில் உள்ள கிருஷ்ணா நகர் முதல் தெரு Extention-ல் தினசரி மின் பிரச்னை ஏற்படுவதாக
மக்கள் புகார் தெரிவித்தனர். உடனடியாக இதனை சரி செய்ய உத்தரவிட்டதின் அடிப்படையில், புதியதாக டிரான்ஸ்ஃபார்மர் அமைக்கப்பட்டது. அதனை ஆய்வுசெய்தேன். புதிதாக டிரான்ஸ்ஃபார்மர் அமைக்கப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். உடன் முன்னாள் எம்.எல்.ஏ ரிச்சர்ட் ஜான்குமார், LJK பொதுச்செயலாளர் டாக்டர் துரைசாமி, செய்திதொடர்பாளர் முகமது ஷஜிதா, இளைஞரணித் துணைத்தலைவர் ஜாகீர் உசேன், மூத்த ஆலோசகர் ஜெய்சங்கர் ஆகியோர் இருந்தனர்.
#KamarajNagar#KrishnaNagar#ElectricityIssue#PowerProblem#JoseCharlesMartin
சேலத்தில் பெண்களை ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி, பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தியதாகத் தமிழக வெற்றிக் கழக பிரமுகர்கள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் பின்னணி மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக உள்ளூர் போலீஸார் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. "ரீல்ஸ் ஆட்சி" நடத்துவதாக முதலமைச்சர் மீது சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், குற்றவாளிகள் மீது அரசு உடனடியாக கடும் சட்ட நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.
#JusticeForWomen#WomenSafety#StopSexualViolence#RuleOfLaw#ProtectWomenRights
புதுச்சேரி - காமராஜ் நகர் தொகுதியில் உள்ள
சங்கரதாஸ் சுவாமிகள் நகர், 3-வது குறுக்குத்தெருவில் உள்ள ஸ்ரீநாகமுத்து மாரியம்மன் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தேன். அப்போது அந்த ஊர்ப்பொதுமக்கள் கோயிலின் தளம் கட்டுவதற்கு உதவுமாறு கேட்டுக் கொண்டனர். உடனடியாக அதை செய்வதற்கு ஆவன செய்வதாக உறுதி அளித்தேன். தொடர்ந்து சீரடி சாய்பாபா விக்ரகத்தை தரிசித்தேன். உடன் முன்னாள் எம்.எல்.ஏ ரிச்சர்ட் ஜான்குமார், LJK பொதுச்செயலாளர் டாக்டர் துரைசாமி, செய்திதொடர்பாளர் முகமது ஷஜிதா, இளைஞரணித் துணைத்தலைவர் ஜாகீர் உசேன், மூத்த ஆலோசகர் ஜெய்சங்கர் ஆகியோர் இருந்தனர்.
#TempleSupport#PublicService#JoseCharlesMartin#Puducherry#PoliticalEvent
புதுச்சேரி - காமராஜ் நகர் தொகுதியிலுள்ள கருவடிக்குப்பம் - காமராஜர் மணிமண்டபத்தில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் மற்றும் காமராஜ் நகர் தொகுதியின் எம்.எல்.ஏ என்கிற முறையில் சென்றேன். அப்போது நீட் மற்றும் போட்டித்தேர்வுகளுக்குப் படிக்கும் மாணவர்களுக்கு இலவச வகுப்புகள் எடுக்க இருக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்தேன். உடன் முன்னாள் எம்.எல்.ஏ ரிச்சர்ட் ஜான்குமார், LJK பொதுச்செயலாளர் டாக்டர் துரைசாமி, செய்திதொடர்பாளர் முகமது ஷஜிதா, இளைஞரணித் துணைத்தலைவர் ஜாகீர் உசேன், மூத்த ஆலோசகர் ஜெய்சங்கர் ஆகியோர் இருந்தனர்.
#KamarajNagar#NEETPreparation#CompetitiveExams#EducationInitiative#StudentSuccess
புதுச்சேரி - காங்கிரஸ் கட்சியின் சீனியர் துணைத்தலைவரும் காமராஜ் நகர் தொகுதியின் காங்கிரஸ் பொறுப்பாளருமான திரு.பி.கே. தேவதாஸ் அவர்கள் அண்மையில் இயற்கை எய்திய நிலையில், குண்டுபாளையத்தில் உள்ள அவரது இல்லம் சென்று, உருவப்படத்திற்கு
மலர்த்தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். அவர்களுடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டேன்.
#PKDeivadas#Tribute#DeepestCondolences#RespectAndRemembrance#KamarajNagar
நாளை உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு, லட்சிய ஜனநாயக கட்சி சார்பாக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் காலை 9:00 மணி முதல் ரத்த தான முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு இல்லாத 22 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமானவர்கள் மட்டும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் (50 வயதிற்கு மேற்பட்டோர் தவிர்க்கவும்). ரத்த தானம் செய்ய விருப்பமுள்ளவர்கள் 91 79042 41183 அல்லது 91 96002 53771 என்ற எண்களுக்குத் தொடர்புகொண்டு உங்கள் பெயர்களைப் பதிவுசெய்யவும். குருதி கொடுப்போம்... உயிரைக் காப்போம்!
#WorldBloodDonorDay#DonateBloodSaveLives#BloodDonationCamp#GiftLife#LJKForHumanity
புதுச்சேரி NDA கூட்டணி மற்றும் மத்திய அரசு இணைந்து, ""மாடுகளும் விவசாயத்தின் உண்மையான நண்பன்"" என்பதை உணர்த்தும் வகையில் கறவை மாடுகளுக்கான தேசிய கால்நடை மிஷன் (NLM) காப்பீட்டுத் திட்டத்தை மானியத்துடன் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பிரீமியத்திற்கு அரசு மானியம் வழங்குவதுடன் காது வில்லை (Ear Tag) பொருத்துவதையும் கட்டாயமாக்கியுள்ளது. மேலும், காப்பீடு இல்லாத பசுக்கள் இறந்தால் ₹6,000 வரையிலும், நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ₹3,000 வரையிலும் அரசே நேரடியாக இழப்பீடு வழங்குவதால், விவசாயிகள் உள்ளூர் அரசு கால்நடை மருத்துவமனைகளை அணுகிப் பலன் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
#NationalLivestockMission#FarmerWelfare#DairyFarmers#LivestockInsurance#RuralDevelopment
தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லான்ஸ் நாயக் A. மீனாட்சி சுந்தரம், தென்காஷ்மீரில் நடந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது முகம், மார்பில் குண்டுகள் பாய்ந்த நிலையிலும் வீரத்துடன் போராடினார். உயிரைப் பொருட்படுத்தாமல் பயங்கரவாதியை நேருக்கு நேர் அழித்து, தன் குழுவினரின் உயிரைக் காப்பாற்றிய அவரது அசாதாரண துணிச்சலைப் பாராட்டி, இந்தியாவின் உயரிய அமைதிக்கால வீர விருதான 'கீர்த்தி சக்கரா' விருதை மேதகு குடியரசுத் தலைவர் அவர்கள் வழங்கி கௌரவித்துள்ளார், அவருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
#KirtiChakra#IndianArmy#Bravery#SaluteToHeroes#PrideOfIndia
புதுச்சேரி - LJK தலைவர் - காமராஜ் நகர் தொகுதி MLA என்கிற முறையில்,மக்களுக்கான உதவிகள், சாதி சான்றிதழ் உட்பட பல்வேறு சான்றிதழ்களைப் பெற வழிகாட்டும் அலைபேசி எண் சேவை குறித்த நோட்டீஸ் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் LJK பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பிரபாகரன், செயலாளர் ரவி ராஜாராம் , இளைஞரணி துணைத் தலைவர் ஜாகீர் உசேன், தொகுதி தலைவர் கோகுல கண்ணன், ரெயின்போ நகர் பொறுப்பாளர் என்.ஆர்.சுரேஷ், பூத் தலைவர் சரவணன் மற்றும் காமராஜ் நகர் தொகுதி கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர்"
#PublicService#CitizenSupport#KamarajNagar#LJK#PeopleFirst