இந்தியாவிலேயே முதல் முறையாக திருநருக்கு வாரியம் அமைத்தார் கலைஞர். ஊக்கத்தொகையும் வழங்கினார். 'திருநங்கை' என்று அழைக்க வேண்டி அரசாணையும் வெளியிட்டார். கடந்த ஆட்சியில் பெண்களுக்கு அறிவிக்கப்பட்ட விடியல் பயணத்தை திருநருக்கும் நீட்டித்தார் ஸ்டாலின். மேலும் ஓய்வுதியமும், விலையில்லா பாலின மாற்று அறுவைச் சிகிச்சையையும் கொண்டு வந்தார்.
இதற்காக யாரும் யாருக்கும் நன்றியுடனோ அல்லது இங்கு யாரும் யார் காலையும் கழுவி குடிக்கவோ சொல்லவில்லை. ஆனால் அறமற்றதனமாக துரோகி என்ற முத்திரை குத்துவது அற்பமான விஷயம்.
அப்போது பதவி இருக்கும் போது திமுகவின் முன்னணியினரோடு இருந்துக்கொண்டு தமிழ்நாடு அரசின் விருதையும், பதவிகளையும் பெற்று அனுபவித்து வெளிச்சம் தேடிக்கொண்டு இன்றைக்கு வேறு ஒரு கட்சியின் கவனதுக்காக கழகத்தின் மீது கண்டதை கழுவி ஊத்தும் சந்தர்ப்பவாத மனநிலை என்ற 'விமர்சனத்தையும்' எதிர்த்தரப்பினர் வைக்க நேரிடும்.
உங்களது திருநங்கை பிரெசை விளம்பரப்படுத்தியதும் அதற்கு உதவி செய்ததும் கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் விசிகவின் சிந்தனைச்செல்வன், ரவிக்குமார் போன்றோர் தான். அவர்கள் தான் ஆதியிலிருந்து திருநர் சமூகத்துக்காக பேசியும் வருகின்றனர். ஆனால் இன்னவரை திருநருக்கு எந்த துரும்பையும் கிள்ளிப்போடாத கட்சியில் இருந்துக்கொண்டு கழகம் துரோகம் இழைத்தது என்பது என்ன நியாயம்?
திருநர் திருத்த சட்ட எதிர்ப்பு, பால்புதுமையினருக்கு வாரியம், அதற்கான அரசு கொள்கை, திருநர் நல வாரியம், திருநங்கை என்ற அங்கீகாரம், ஊக்கத்தொகைகள், விடியல் பயணம், சிறந்த திருநர் விருது என உங்களுக்கும் உங்களது சமூகத்துக்கும் எல்லாம் செய்த கழகம் உங்களுக்கு துரோகி ஆனால் திருநர் திருத்த சட்டத்துக்கு எதிராக வாயத்திறக்காத, அப்பன் பண்ண தப்பு பாட்டில் எட்டுக்கு பிறகு Pause விட்டு பாட்டு பாடிய நடிகன் உங்களுக்கு மீட்பர்.
நன்றியுடன் இருக்க வேண்டும் என்பதெல்லாம் தவறு தான் ஆனால் வரலாற்றை மறந்து கழகத்துக்கு துரோகி பட்டம் கட்டுவது அற்ப சந்தர்ப்பவாதம் என்பதன்றி வேறில்லை.
கலைஞர் சொன்னது தான் "நம்மால் பயன் பெற்றவர்கள் எப்போதும் நமக்கு நன்றியுணர்வுடன் இருப்பார்கள் என எதிர்பார்ப்பது தவறு என்பதையும் ஒருவருக்கு நாய் செய்யும் உதவியை நமக்கு கிட்டிய நல்வாய்ப்பாக கருதி செய்து முடித்ததும் மறந்துவிட வேண்டும் என்பதையுமே இத்தனை ஆண்டுகால பொதுவாழ்க்கை எனக்கு கற்றுக்கொடுத்துள்ளது"
- Gypsy