ஏகாதிபத்திய எதிர்ப்பு - கியூப ஆதரவு இயக்கம்!
சோசலிச கியூபாவை நசுக்க அனைத்து வகைகளிலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அண்மைக் காலமாக, பொருளாதார ரீதியாக கடுமையான நெருக்கடிகளை கியூபாவிற்கு அமெரிக்கா கொடுத்து வருகிறது. எனினும், “கடைசி கியூபக் குடிமகனின், கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவோம், ஒரு போதும் சரணடைய மாட்டோம்” என அறிவித்து, கியூபா போராடி வருகிறது.
இந்நிலையில், உலக ஏகாதிபத்திய எதிர்ப்பின் அடையாளமாய் மாறிப்போன மகத்தான புரட்சியாளர் சேகுவேராவின் பிறந்த தினத்தையொட்டி, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, கியூப ஆதரவு இயக்கத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்திருந்தது.
தமிழகத்தில், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) இன்று சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய மையங்களில் கியூப ஆதரவு இயக்கம் இன்று நடைபெறுகிறது.