கேரளத்தில் மீண்டும் நிபா வைரஸ் அச்சுறுத்தல் “அரசியல் கடந்து ஒன்றிணைவோம்”
கேரள மாநிலம் கோழிக் கோட்டில் ஆட்கொல்லி வைரஸான ‘நிபா’ வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. இதனால் கோழிக் கோடு கட்டுப்பாடு உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முந்தைய கால அனுபவங்களைக் கொண்டு அறி வியல் பூர்வமாக இந்நோயை எதிர் கொள்ள வேண்டும் என்றும், மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெறுவதை விட உயிர்களைக் காப்பதே முக்கியம்.
“தற்போதைய சுகா தாரத்துறை அமைச்சராக இருக்கும் கே.முரளிதரன், கடந்த அரசாங்கத்தின் போது (வீணா ஜார்ஜ் அமைச்சராக இருந்தபோது) நிபா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆற்றிய விமர்சன உரைகளைச் சுட்டிக்காட்டி பலரும் தனக்கு செய்திகளை அனுப்பி வருகின்றனர்.
இதைப் பற்றி நான் இங்கு எதுவும் எழுதப் போவதில்லை. காலம் உண்மையை நிரூபிக்கட்டும். நோய்களின் நெருக்கடிகள் மற்றும் சவால்களில் மக்களை அரவணைத்து, சிறந்த அறிவியல் ரீதியான பாதுகாப்பை வழங்குவது அவசியமாகும். அதற்காக ஒன்றுபட்டு நிற்பதே இடதுசாரிகளின் அணுகுமுறையாகும்.
கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆர்டிபி சிஆர் (RTPCR) பரிசோதனையில் நிபா நோய் பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நோயாளிக்கு முறையான சிகிச்சை அளிப்பதுடன், நோய் பரவாமல் தடுக்கவும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டும்.
புனே தேசிய நச்சுயிரி நிறுவனம் (NIV) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துவதற்கு முன்பாகவே, மாநில ஆய்வக முடிவுகளின் அடிப்படையில் அவசர தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்.
கேரள மாநிலம் ஏற்கெனவே நிபா வைரஸை பலமுறை கையாண்டுள்ளதால், அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அறிவியல் பூர்வமான சிகிச்சை நெறிமுறைகளும் தடுப்பு வழிகாட்டுதல்களும் உள்ளன. அவற்றை உடனடியாகப் பின்பற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து தனிமைப் படுத்துவது மற்றும் பரவலைத் தடுப்பது மிக முக்கியம்”.
தோழர் வீணா ஜார்ஜ், முன்னாள் கேரள சுகாதாரத்துறை அமைச்சர்
#CPIM #KeralaHealth #LeftApproach #PublicHealthFirst #NipahVirus