#OneYearOfKottukkaali
நான் Film Festival Audience லாம் இல்ல,
Festival க்கு ரஜினி, விஜய், SK படங்கள தியேட்டருக்கு போயி பாக்கற சாதாரண மதுரை Audience தான்.
But அப்டி ஒரு சாதாரண கமர்ஷியல் சினிமா ரசிகனான எனக்குமே this was THE Best Movie and THEATRICAL Expriences of 2024!
முதல் காட்சியிலருந்து சேவலுக்கும் Anna Ben Character க்கும் இருக்கற Parallels அ Visual ஆ Draw பண்ணிக்கிட்டே வர்றது..
சடங்குகளும், சம்பிரதாயங்களும் அதை நம்பற பெண்களை பாதிக்கறத நேரடியா அனுபவிச்ச பின்னாடியும் அந்த Patriarchy ய அடுத்த தலைமுறைக்கு கடத்த துடிக்கற பெண்கள்..
அந்த பெண்களை தூரத்துலருந்து பார்த்தா அப்பாவ, புருசனையே அதட்டி மிரட்டி வெச்சிருக்காங்களேனு தோனும், ஆனா அது வெறும் வெளித்தோற்றம் தான், நிஜத்துல எவ்ளோ Toxicity ய Go Through பண்றாங்கன்னு போகப்போக தெளிவு படுத்தறது..
“பாண்டிய லேசா நெனைக்காத அவன் கொலையே பண்ணிப்புடுவானப்பா” னு கொலை, கெத்து, தோரணை, Virginity, சரக்குனு எதை எல்லாம் ஆண்மையின் அடையாளமா பாக்கறோம்றது..
வெட்டிப்பயலுக, சம்பாரிக்கலனு ஊரே இவிங்களயே உருப்புடாம போறவனுகனு காறிதுப்புறப்ப கூட, இவனுக யாரோ ஒருத்தனுக்கு எப்டி கட்டிக்குடுக்கனு சொல்றது..
வீரன், சூரன்னு வாய்ச்சவடால் பேசிட்டு, காக்காவும் குழந்தையுமே அசால்ட்டா டீல் பண்ற மாட்டை பார்த்து பயந்து நிக்கறது..
சூரி போட்டு அடி பொளந்த பின்னாடியும், அய்யோ சாமிக்கு போட்ட மாலைய போயி அத்துப்புட்டானேனு கவலைப்படறது..
ஆணவக்கொலை பண்லாம்ற அளவுக்கு பேசறப்ப கூட அங்க இருக்கற யாருமே சலனமே இல்லாம இருக்கறது..
அந்த கிராமத்துக்கு கார் வசதி வாய்ப்புலாம் வந்தபின்னும் பழமைவாதம் மட்டும் மாறாதது..
மானூத்து மந்தையில பாட்டு, ஒத்தையடி பாதையில பாட்டுக்கு Shift ஆகறது (கனால அத்தை பொன்ன லவ் பண்ணாலும், அவ கனவுக்கு நம்ம காதல் குறுக்க நிக்கக்கூடாதுனு அவளை தொந்தரவு பண்ணமாட்டான்)..
கண்டவன் நம்ம பொண்ணை தொடக்கூடாதுனு பேசினவனுக, அந்த பூசாரி பண்றதை மட்டும் சாதாரணமா எடுத்துக்கறது..
இப்டி படம் நெடுக
@PsVinothraj ன் Social Commentary and Command over the Craft, அட்டகாசம்!
நா கிட்டத்தட்ட ஒரு Goundamani ஓட Satirical Social Commentary மாதிரி இதை பயங்கரமா சிரிச்சு, ரசிச்சு, சிந்திச்சு, மகிழ்ந்து படம் பாத்தேன்.. It’s a Very Important Film With very High artistic and Entertainment Values in a Form which we aren’t familiar with before.. இந்த Form Of Story telling அ கொஞ்சம் பொறுமையா கவனிச்சு, வேற படங்களோட Form ஓட Compare பண்ணாம பார்த்தா, இதுல ரசிக்க அவ்ளோ விஷயங்கள் இருக்கு!
@sooriofficial நடிப்பும், மெனக்கெடலும், Conviction உம் 💙🫡
படம் முழுக்க பெருசா ஒரு வார்த்தை கூட பேசாட்டியும் Anna Ben நடிப்பு அவ்ளோ அட்டகாசமா இருக்கும்.. குறிப்பா interval ல அவ்ளோ களேபரத்துக்கு பின்ன Anna Ben சாந்தமா கண்ணாடிய பார்த்து தலைய சீவிட்டு அந்த குட்டி பையன பார்த்து சிரிக்கற இடம்! 💙
And படத்துல நடிச்ச எல்லா துணை நடிகர்களும் ரொம்ப நல்லா நடிச்சிருந்தாங்க.. Camera, Sound Design னு Technical ஆவும் I loved Everything!
குறிப்பா நேரடியா காட்சிகளா இல்லாம Visually Artistic ஆ அவ்ளோ விஷயங்கள் ரொம்ப புடிச்சது.. அப்டி ரொம்ப புடிச்ச மூணு காட்சிகள்:
1) Interval Auto Scene ல சண்டை போகறப்ப, ஒரு Wide Shot போயிருப்பாங்க.. கிராமங்கள்ல அவ்ளோ அழகியல் இருக்குனு நீங்க பார்த்து ரசிச்சிட்டு கடந்து போகற இந்த ஆறு, பாலம், செடிகள், மலைகளுக்கு நடுவுல தான் இவ்வளவு கொடுமைகளும் நடக்குதுனு காட்டின அந்த காட்சி..
2) படம் நெடுக அடைஞ்ச வீடு, முள்ளுச்செடியா மறைச்ச ரோடு, ஆட்டோனு Claustrophobic ஆவே நகர்ற படத்துல, ஒரு கட்டத்துல சின்ன Gap ல அந்த பரந்த வெளி தெரியறப்ப, Anna Ben அதுல நடந்து போகறாப்ல தனக்கு இழைக்கப்பட்ட போகும் அநீதியை கற்பனை பண்ணி பார்க்கற காட்சி நமக்கே அவ்ளோ choking ஆ இருக்கும்..
3) சூரி கடைசில அந்த பூசாரி சடங்கை பார்த்து Uncomfortable ஆ இருக்கறப்பவே Clear ஆ வினோத்ராஜ் சொல்லிட்டாரு முடிவு என்னான்னு.. ஆனா அடுத்த ஷாட்ல வெறும் Camera Point Of View ல பாத்துட்டு இருக்கற ஆடியன்ஸ பார்த்து நீங்க என்ன பண்ணப்போறீங்கன்ற கேள்விய தான் கேக்கறாப்ல.. Clear ஆ நான் இந்தப்பக்கம் நிக்கறேன் நீங்க எந்தப்பக்கம் நிக்கறீங்கன்றத நீங்க முடிவு பண்ணிக்கங்கனு சொன்ன ஒரு Beautiful Climax அ எப்டி Incomplete னு சொல்றாங்கனு புரியல எனக்கு..
@Siva_Kartikeyan , சூரி ரெண்டு பேருமே Vinothraj ஓட இந்த Vision ஐ Back பண்ணத தங்களோட Career முழுக்க ஒரு பெரும் சாதனையா சொல்லி பெருமைப்பட்டுக்கலாம்..
வெற்றிமாறன் சொன்னமாதிரி நிச்சயமா PS VinothRaj தமிழ் சினிமாவோட மிக முக்கியமான Find..
He is Not here to just Stay, He is Here to Create history!