விவசாய நிலத்தை அபகரிப்பதற்காக தலைமைச் செயலகத்தில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் அழைப்பில்லாமல் பங்கேற்றார் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.
கடலூர் மாவட்ட விவசாயிகள் சார்பாக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், முடிவேதும் எடுக்காமல் தலைமைச் செயலாளர் கூட்டத்தை முடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
பின்னணி
என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த பாமகவும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், கடலூர் மாவட்ட ஆட்சியரால் நிலத்தை அபகரிக்க முடியவில்லை. இந்தப் போராட்டங்களையும் மீறி, எப்பாடுபட்டாவது நிலத்தை எடுத்தே ஆகவேண்டும் எனும் நோக்கில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில், 02.05.2023 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சிறப்புக்கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் 2020ஆம் ஆண்டு அரசாணையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட கத்தாழை (கரிவெட்டி), கீழ்வளையமாதேவி, மேல்வளையமாதேவி ஆகிய ஊர்களை உடனடியாக கையகப்படுத்தி என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்கு அளிப்பதற்காக இந்தக் கூட்டத்தைக் கூட்டினார்கள்!
கடலூர் மாவட்ட விவசாயிகள் சார்பாக இக்கூட்டத்தில் பங்கேற்ற மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் விரிவான கோரிக்கை மனுவை அளித்தார். அவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், கடைசியில் முடிவேதும் எடுக்காமல் தலைமைச் செயலாளர் கூட்டத்தை முடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
#NLC #AnbumaniRamadoss