🛑வரலாற்றைப் படுகொலை செய்யும் கோழைத்தனத்திற்கு எதிராக...
பொய்களையும், சுயநலப் புனைவுகளையும் தோலுரித்துக் காட்டுவோம்.
அண்மைக்காலமாக ஈழத்தமிழ் புலம்பெயர் சமூக ஊடகங்களில் ஒரு புது விளையாட்டு தொடங்கியிருக்கிறது.
“தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் சார்ந்தும், தமிழீழ விடுதலைப்புலிகள் சார்ந்தும், ஆதாரமற்ற, சரிபார்க்கப்படாத தனிப்பட்ட கதைகளை recording space லைவ் பேச்சுகளிலும், போஸ்ட்களிலும் பரப்புவது அதிகரித்திருக்கின்றது”
இவ்வாறான தவறான வரலாற்றுப் பிறழ்வுமிக்க செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாகி, பின்னர் “வரலாறு” ஆக மாற்றப்படும் அபாயம் உண்மையில் உள்ளது என்பதை உணர்ந்தும் எம்மால் கடந்து செல்ல முடியாது..
தலைவர்.வே பிரபாகரன் அவர்கள் பற்றிய உண்மையான வரலாறு, அவரது வாழ்க்கை, தமிழீழ விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள், 2009 முடிவு என அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
தனிப்பட்ட வருகை/சாப்பாடு போன்ற கதைகள் - இவை நம்பகமான பல ஆதாரங்களுடன் (multiple corroboration) இருந்தால் மட்டுமே வரலாற்று உண்மையாக ஏற்றுக்கொள்ளப்படும். ஒரு லைவ் பேச்சில் ஒருவர் சொன்னதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு “வரலாறு” என்று பரப்புவது தவறு.
வரலாற்றைப் பாதுகாப்பது முக்கியம். உணர்ச்சி, அரசியல் அல்லது “ஹீரோ” உருவாக்கும் நோக்கத்துடன் உண்மைகளை மாற்றுவது எதிர்காலத்தில் பெரிய பிரச்சினையை உருவாக்கும்
இது போன்ற சரிபார்க்கப்படாத தனிப்பட்ட கதைகள்/அனெக்டோட் (Anecdote) தான். (அதாவது நகைச்சுவையான சிறு கதையே அனெக்டோட் (Anecdote) எனப்படும். தமிழில் இது உபகதை, குட்டிக்கதை என்றும் சொல்வார்கள் )
ஆகவே உண்மைகள் உறங்குவதில்லை என்று உறுதியாக நம்புகின்றவன் என்ற வகையில்,
நான், 1979ஆம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் பயிற்சி முகாமில் காலடி வைத்தவன். தலைவர் பிரபாகரனின் குரல் என் செவிகளில் முதன் முதலில் ஒலித்த நாளிலிருந்து, அவரது ஒவ்வொரு அடியையும், ஒவ்வொரு முடிவையும், ஒவ்வொரு தியாகத்தையும் நேரடியாகக் கண்டவன். காட்டிலும், மலையிலும், கடலிலும், இரவு-பகலாக நடைபெற்ற போராட்டத்தின் ஒவ்வொரு துளி வியர்வையிலும், இரத்தத்திலும் பங்கெடுத்தவன்.
அந்தப் புலிகள் இயக்கத்தின் உண்மையான வரலாற்றை என் எலும்புகளில் பதித்துக் கொண்டவன்.
ஆனால் இன்று, புலம்பெயர் தளத்தில் சிலர் செய்யும் செயல் என் இரத்தத்தை கொதிக்க வைக்கிறது.
🔊 “தலைவர் அவர்கள் சீமானின் அப்பா வீட்டுக்கு வந்து சாப்பிட்டார்”, “இப்படிச் சொன்னார்”, “அப்படிச் செய்தார்” என்றெல்லாம் ஆதாரமற்ற, அடிப்படையற்ற, புனைந்து பரப்பப்படும் அவதூறுகளைப் பார்க்கும் போது, எம் உள்ளம் கொதிக்கிறது.
🛑இது தலைவருக்கு செய்யும் அவமானம் மட்டுமல்ல. இது புலிகள் இயக்கத்தின் முழு வரலாற்றுக்கும் செய்யும் படுகொலை.
தலைவர் பிரபாகரன் ஒரு கௌதம புத்தர் போன்ற முற்றும் துறந்த ஞானி அல்ல; அவர் ஒரு புரட்சியாளர். அவர் தவறுகள் செய்திருந்தால் அதையும், சாதனைகள் செய்திருந்தால் அதையும், உண்மையாகவே பதிவு செய்ய வேண்டும். ஆனால் ஒரு recording space பேச்சில் ஒருவர் சொன்ன “கதை”யை ஆதாரமாக வைத்து பலர் வரலாற்றை எழுத முயல்வது- இது மிகப் பெரிய துரோகம். இது எமது தியாகிகளின் இரத்தத்திற்கு இழைக்கப்படும் அநீதி.
🔊மேலும் கொடுமை என்னவென்றால், இந்தப் பொய்களை எதிர்த்து நாங்கள் பேசும் போது, சிலர் உடனடியாக ஒரே ஆயுதத்தை உபயோகிக்கிறார்கள்:
“திராவிடக் கைகூலி”
என்று முத்திரை குத்தி, விவாதத்தை முடித்து விடுகிறார்கள்...
இது மிகப் பெரிய வரலாற்றுத் துரோகம்.
1979 இல் புலிகள் இயக்கத்தில் இணைந்த என்னைப் போன்றவர்களை, தமிழ்நாட்டு உறவுகளை, இந்தியத் தமிழ் மக்களின் ஆதரவை - “திராவிடக் கைகூலி” என்று முத்திரை குத்தி ஒதுக்குவது என்பது, எமது போராட்டத்தின் ஒரு பெரும் பகுதியை மறுப்பதாகும்.
தமிழீழப் போராட்டத்திற்கு தமிழ்நாட்டு மண் கொடுத்த உதவி, இரத்தம், அரசியல் ஆதரவு இவற்றையெல்லாம் ஒரே அடியில் மறுப்பதாகும்.
தலைவர் பிரபாகரனே, தமிழ்நாட்டுத் தோழர்களுடன், இந்தியத் தமிழ் மக்களுடன் கொண்டிருந்த உறவை நாங்கள் அறிவோம். அந்த உறவை மறைத்து, “திராவிட” என்ற வார்த்தையை அவதூறாகப் பயன்படுத்தி, உண்மையான புலிகள் இயக்கப் பயணிகளை ஒதுக்குவது - ஓர் வரலாற்றுப்பிறழ்வு மிக்க கற்பிதமேயாகும் ?
👉உங்களுக்கு வரலாறு தெரியவில்லை என்றால் மௌனம் சாதியுங்கள். ஆனால் உண்மையை அறிந்த நாங்கள் மௌனம் சாதிக்க மாட்டோம்.
👉பொய்களால் தலைவரைப் புனிதப்படுத்த முயல்வது அவருக்கு அவமானம்.
👉உண்மையைப் பேசுபவர்களை “திராவிடக் கைகூலி” என்று ஒதுக்குவது இயக்கத்திற்கே செய்யும் துரோகம்.
🔊நாங்கள் உயிர் துறந்த தோழர்களின் பெயரால் சொல்கிறோம்:
💥வரலாறு என்பது உணர்ச்சியல்ல-உண்மை.
💥புலிகள் இயக்கம் என்பது புனைவல்ல -உண்மையான தமிழ்த்தேசியத்தின் அடையாளம்.
எனவே,
எமது தலைவரின் உண்மையான வரலாற்றைப் பாதுகாப்போம்.
எமது இயக்கத்தின் உண்மையான பயணத்தைப் பதிவு செய்வோம்.
தமிழீழம் விடியும்!
புலிகள் வரலாறு அழியாது!
புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்
இவண்,
அ.தொல்காப்பியன்
அடங்கொய்யா இது என்னடா புது கதையா இருக்குது!!
சீமானின்ட அப்பாட வீட்ட தலைவர் போனாறாம், சாப்பிட்டாறாம் அதிட நீட்சி இப்ப தொடருதாம்..
இந்த விசயம் சீமானுக்கு தெரிஞ்சு இருந்தால் சீமான் மேடைகளில் இதை கதைக்காம விட்டிருப்பாராடா? 😂
ஈழத்து சீமான் தம்பிகளா உங்களுக்கு மனசாட்சியே இல்லையாடா!! சீமானுக்கு அடிவாங்கி குடுக்கிறதே இவனுகள் தான் சீமான் இவங்களை விட்டு தள்ளி இருந்தாலே ஒரு பிரச்சனையும் வராது!!