பாரதிராஜா இறுதி சடங்கில் முட்டிக் கொண்ட உறவுகள்.
நமக்கு அதில் நிறைய பாடங்கள் இருக்கிறது..!!
மனோஜ் நடிகை நந்தனாவை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரு மகள்கள். பாரதிராஜவின் மகள் ஜனனி திருமணத்திற்கு பின் மலேசியாவில் குடியேறி உள்ளார்.
மனோஜ் மறைவிற்கு பிறகு உடைந்திருந்த பாரதிராஜா மிகவும் தளர்ந்து போனார். மனைவி தேனி போய்விட்ட நிலையில் மகளும் மலேசியாவில் மருமகளும் உடனில்லாது பாரதிராஜாவை கவனித்து கொண்டவர்கள் நியமிக்கப்பட்ட நர்சுகள்.
பாரதிராஜா மரணத்திற்கு பிறகு அவரை நல் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் தான் மேற்படி முட்டல் மோதல்கள் நடந்தேறி உள்ளது.
மருமகள் நந்தனாவையும் பேத்திகளையும் பாரதிராஜாவின் மகள் ஜனனி அந்த நிகழ்வில் பங்கேற்கவிடாது தகராறு செய்திருக்கிறார். சேரில் அமர்ந்திருந்த நந்தனாவின் கைகளை முறுக்கி எழுப்பி விட.. நந்தனாவின் மகள்கள் அழுதபடி நின்றிருக்கிறார்கள். ராதிகா ஓடி வந்து இரு தரப்பிடமும் கைகளை கூப்பி மன்றாடி பிரச்னை பெரிதாகாமல் தடுத்திருக்கிறார்.
ஏற்கனவே தனது பெயரில் பாரதிராஜா வாங்கியிருந்த அபார்ட்மெண்ட்டில் வசித்து வரும் நந்தனாவை காலி செய்யுமாறு ஜனனி போலீசில் புகார் கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.
பாரதிராஜா இறுதி சடங்கை ஒட்டி வெளியே வந்த குடும்பத் தகராறுகளை பார்த்த போது ஒரு விஷயம் மட்டும் மீண்டும் மீண்டும் தோன்றியது.
உலகத்துக்கே காதல், பெண் முன்னேற்றம், பெண் சொத்துரிமை, ஜாதி மறுப்பு என்று பாடம் எடுத்த பலரது குடும்பங்களிலும் கூட இறுதியில் வந்து நிற்பது மனித உறவுகளின் சிக்கல்கள்தான்.
இங்கே யார் சரி? யார் தவறு?
என்று நமக்கு தெரியாது,தெரிய வேண்டிய அவசியமும் இல்லை.
ஆனால் வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிகிறது.
மனிதர்கள் சண்டை போடுவது பெரும்பாலும் கொள்கைகளுக்காக அல்ல.
உரிமைகளுக்காக... பாதுகாப்புக்காக.. எதிர்காலத்திற்காக.. சில நேரங்களில் பணத்திற்காக.
சில நேரங்களில் பணம் என்ற பெயரில் கிடைக்கும் அங்கீகாரத்திற்காக.
ஒரு மனிதன் வாழ்நாள் முழுக்க ஒரு ராஜ்ஜியத்தை கட்டியிருக்கலாம்.ஒரு தலைமுறையையே பெரிய அளவில் பாதித்திருக்கலாம். "சூப்பர்ஸ்டார்" என்று கொண்டாடப்பட்டிருக்கலாம்.
ஆனால்... அவருக்கு பிறகு அவருடைய குடும்பம் அமைதியாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை அவையெல்லாம் கொடுக்காது.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால்... 'புகழ்' என்பது எப்போதும் தனிப்பட்ட சொத்து."நிம்மதி" என்பது குடும்ப சொத்து.
ஒன்று இருந்தால் மற்றொன்றும் இருக்கும் என்று எந்த விதியும் இல்லை.
நிறைய நேரங்களில் உலகம் அறிந்த வெற்றியாளர்கள்...வீட்டுக்குள் தோற்றவர்களாக இருக்கிறார்கள்.
அதேபோல்...
உலகம் அறியாத சாதாரண மனிதர்கள்...
தங்களுக்கு பின்னால் சண்டையில்லாத குடும்பத்தை விட்டுச் செல்கிறார்கள்.
ஒரு மனிதன் எவ்வளவு சம்பாதித்தான் என்பது முக்கியமான கேள்வி இல்லை.
அவன் போன பிறகு... அவன் சம்பாதித்ததை வைத்து அவனுடைய பிள்ளைகள் அடித்துக் கொண்டார்களா?அல்லது ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டார்களா? என்பதே முக்கியமான கேள்வி.
ஏனென்றால்...ஒரு மனிதனின் உண்மையான உயில் அவன் எழுதி வைத்த பத்திரம் மட்டும் அல்ல.அவன் உயிரோடு இருக்கும்போது உருவாக்கி வைத்த குடும்ப சமநிலையும் தான். அதை சட்டத்தால் எழுத முடியாது.பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியாது.வாழும் காலத்திலேயே கட்டமைக்க வேண்டும்.
#Bharathiraja
படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி ஐயர்களை தவறா சித்தரிக்கிறதா சொல்லி படத்துக்கு கேஸ் போட்டு இழுத்தடிச்சு ஒரு வழியா படம் ரிலீஸ் ஆச்சு. திருநெல்வேலி பேரின்பவிலாஸ் தியேட்டர்ல 118 நாள் ஓடிச்சு.100 வது நாள் Celebration ல அப்பா கூட போயிட்டு வந்தேன் 😍❤️ அந்த வயசுல இந்த படம் ஒரு சாதாரண கமர்சியல் படம் மாதிரி தோணுச்சு ஆனா ரீசன்டா கூட யூடியூப்ல ஒரு குரூப் இந்த படத்தை பத்தி டீடெயிலில் பேசி இருந்தாங்க அவ்வளவு ஆச்சரியமா இருந்துச்சு. ஒரு சாதாரண கமர்சியல் படத்திலேயே இவ்வளவு விஷயங்களை கமலால் மட்டும் தான் சொல்ல முடியும் 😍❤️
பிளாஷ்பேக்: தசாவதாரம் திரைப்படம் வெளியாகி 18 ஆண்டுகளை கடந்த நிலையில், அந்த திரைப்படத்தில் 10 கதாபாத்திரங்களில் நடித்த கமல்ஹாசனின் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு நாள் வீதம், படப்பிடிப்பை நடத்தியுள்ளார் இயக்குனர் KS ரவிக்குமார். ஒவ்வொரு கெட்டப் போடவும் குறைந்தது 5 மணி நேரம் எடுத்துள்ளார் கமல்.
#Dasavathaaram#kamalhaasan#KsRavikumar#ThanthiFlashback#Thanthitv
ஆண்டவரே
Asia's first female bus driver வசந்தகுமாரி acted in #மகளிர்மட்டும்
Such thought provoking female centric film made by #RKFI in 1994
#KamalHaasan
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
#அன்பேசிவம் படத்திற்கு 50 சதவீதத்திற்கு மேல #KamalHaasan சார் சம்பளம் வாங்கவே இல்ல, அவர் பண்ண உதவியை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம், அவர் ரேஜ்க்கு அவர் அப்படி பண்ணணும்னு அவசியமே இல்ல ஆனா பண்ணாரு
இன்னைக்கு அதே மாதிரி பாயிண்ட் இல்லாததால படம் எடுக்க முடியல னு நினைக்கிறேன்
- தயாரிப்பாளர் #முரளிதரன்
கொல்றத கொன்னுட்டு என்ன அழுக வேண்டியிருக்கு...
அந்த பையன தூக்கிட்டு அவள விட்டுட்டு போயிருந்தாலே மூதேவி திருந்தியிருப்பா... அது தான் ப்ராக்டிக்கலா சரியும் கூட...
பொறுப்பில்லாத பெத்தவங்களால குழந்தைகள் தான் பாவம்... கொஞ்ச நாளா குழந்தைகள் தொடர்ந்து கஷ்டத்துக்கே உள்ளாகுறாங்க... பாவமா இருக்கு...
x.com/Kokki_Trolls/status/20…