உல்லாசப் பயணத்தில் இருப்பவருக்கு ஓய்வு எதற்கு?
பிரதமர் மோடி அவர்கள் ஓய்வில்லாமல் உழைப்பதாக அடிக்கடி கூறி வருகிறார் அமித்ஷா.
ஆனால், 12 ஆண்டுகளில், ஒரு ஆண்டிற்கு நிகரான நாட்களை வெளிநாட்டு சுற்றுப் பயணத்திலேயே கழித்திருக்கிறார் நமது பிரதமர். போட்டோ ஷூட், மேக்கப், டெலி பிராம்ப்டர், மத பகைமையை மூட்டும் பிரச்சாரங்கள், அம்பானி, அதானிக்கு உதவி செய்தல் மூலம் பாதி நாட்கள் ஓடி விட்டன.
அமித் ஷா அவர்கள் சொல்வது போல் ஓய்வில்லாமல் உழைப்பதாகவே வைத்துக் கொள்வோம். ஆனால், பிரதமர் மோடி அவர்களால் எந்த மாற்றமும், முன்னேற்றமும் கொண்டு வர முடியவில்லையே!?
- வேலை வாய்ப்பு உயரவில்லை,
- ரூபாய் மதிப்பு உயரவில்லை,
- ஏழை - பணக்காரர் பொருளாதார இடைவெளி அதிகரித்துள்ளது,
- 1.2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்,
- 1.15 லட்சம் மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்,
- 5 ஆண்டுகளில் 75,000 MSME-கள் மூடப்பட்டுள்ளன,
- தீவிரவாதத் தாக்குதல்களால் 7000 பேர் மரணமடைந்துள்ளனர்,
- மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண இயலவில்லை,
- புல்வாமா தாக்குதல் நடந்த செய்தி கேள்விப்பட்ட பின்னர் 3 மணி நேரம் போட்டோ ஷூட்டிங்கில் இருந்தார்,
- உலக அளவிலான குறியீடுகளில் - ஜனநாயகம், ஊடக சுதந்திரம், மனிதவளம், பட்டினி, சுற்றுச்சூழல், ஊழல், மத சுதந்திரம் என முக்கிய குறியீடுகள் அனைத்திலும் படுகுழி நோக்கி செல்கிறது இந்தியா.
- ஆண்டுக்கு 12 சிலிண்டர் மானிய விலையில் வழங்கப்படும் என்று கூறிய பாஜக இப்போது 4 சிலிண்டர் ஆகக் குறைத்திருக்கிறது.
நிலவரம் இப்படியிருக்க ஓய்வில்லாமல் உழைக்கிறார் என்பதன் பொருள் என்ன?