நீண்ட பதிவு:
ஒரு வாரமா சொந்த ஊர்ல நிலம் வாங்கிறது சம்மந்தமா அலைஞ்சுட்டு இருக்கேன், நிறைய பேரை சந்திக்கிற சந்தர்ப்பம் கிடைத்தது.
அதிலிருந்து கிடைத்த தகவலின்படி தவெக ஆட்சிக்கு பிறகு நடந்த மாற்றங்கள்
1. பிளாக்கில் சரக்கு 90 சதவீதம் கிடைப்பதில்லை (12 to 10 தான் கிடைக்குது)
2. கஞ்சா அறவே கிடைக்கவில்லை.
3. கூல் லிப் போன்ற போதை வஸ்துகள் 70 சதவீதம் கிடைப்பதில்லை.
4. குவாரிகளில் அரசாங்கம் நிர்ணயித்த அளவிற்கு மேல் தோண்ட முடியவில்லை என்றும் அதிகாரிகள் சரியாக இயங்குகின்றனர் என குவாரி ஓனர் புலம்பல்.
5. பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்க மறுப்பதாக ரியல் எஸ்டேட் பிரதிநிதிகள் மகிழ்ச்சி. அப்ரூவல் விஷயத்திலும் விரைவாக கிடைக்கும் என்று அதிகாரிகள் சொல்வதாகவும் சொன்னார்கள்.
6. கான்டிராக்டர்கள் கட்சி நிதி யாரும் கேட்பதில்லை என தெரிவித்தனர்.
7. நிறைய துறைகளில் லஞ்சம் வாங்கிறது குறைந்து வருகிறது எனவும் தெரிவித்தார் (கலெக்டர் அலுவலகத்தில் ஒய்வு பெற்றவர் தகவல் சொன்னார்)
இன்று காலை சென்னையில் எக்மோரில் இருந்து ஆட்டோக்கார அண்ணன் (55 வயது இருக்கும்), அவரிடம் விசாரித்ததில்
தம்பி காலையிலேயே சரக்கு அல்லது கஞ்சா அடிச்சிட்டு சில பேர் சுத்திட்டு இருப்பானுங்க, மட்டையாகி படுத்து இருப்பானுங்க, அது கிடைக்காததல் வேலைக்கு ஒழுங்கா கிளம்பிரானுங்கன்னு சொன்னார் (இந்த ஆங்கிள்ல நான் யோசிக்கவே இல்லை, மனித உழைப்பு வீணாக போய் இருக்கு).
சிஸ்டம் வெளிப்படையாகவும், தூய்மையாகவும் நடக்க தயாராகி வருகிறது 🤩
இதேமாதிரி போனால் ஐந்து வருடத்தில் மிகப் பெரிய மாற்றம் தமிழகத்தில் கண்கூடாக பார்க்கலாம்..
விர்ச்சுவல் வாரியர்ஸில் நானும் ஒருவன் என்பதில் பெருமையாக உணர்கிறேன் 🥳