துர்க்கை அம்மன் கோயிலருகில் மெட்ரோ பணி சம்பந்தமான நமது WA1216 மேல் முறையீடு வழக்கின் 9.1.26 நடந்த விசாரணை- Our WA 1216 appeal petition reg Durgai Amman Temple Metro matter heard on 9.1.26 (Read 2 of thread)
—----
தலைமை நீதிபதி கொண்ட முதன்மை அமர்வில் ஆலயம் காப்போம் அமைப்பின் சார்பாக ராமமூர்த்தி, மூத்த வழக்கறிஞர் ரவி அவர்கள் வாதிட்டார்கள். அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். அமைப்பின் WP18163 வழக்கில் கோயிலுக்கு நேரில் வந்து ஆய்வு செய்த மாண்பமை நீதிபதி கோயிலுக்கு மிக நெருக்கமாக ரயில் நிலைய நுழைவு வாயிலை அமைத்தல் ஏற்புடையதல்ல என்று திட்டவட்டமாக கூறிட, CMRL தரப்பினர் அருகிலுள்ள யுனைடெட் இந்தியா (UIA) வளாகத்தின் OSR முன் பகுதியில் இதை அமைத்திடலாம் என்று ஒப்புக்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ததன் படியே தீர்ப்பு வழங்கப்பட்டது. UIA தொடர்ந்த WP 33116 வழக்கில் வாதியின் கட்டிடம் பாதிக்கப்படும் என்ற கோணத்திலேயே கோயில் அருகிலேயே வாயிலை அமைத்துக் கொள்ளலாம் என தனி நீதிபதி மாற்றி தீர்ப்பளித்தது முரணானது என்று ரவி அவர்களால் விளக்கப்பட்டது. UIA தரப்பு மூத்த வழக்கறிஞர் வக்கீல் ஆலயம் காப்போம் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் தங்களை கலந்தா லோசிக்காமல் தங்கள் கட்டிடம் பாதிக்கப்படும் வகையில் தீர்ப்பளித்துள்ளார்கள், அதை நாங்கள் ஏற்க முடியாது என்று வாதிட்டார். அரசு தலைமை வழக்கறிஞர் பிஎஸ் ராமன் அவர்கள் UIA வளாகத்தின் முன் பகுதியில் 400 ச.அடி கொண்ட சிறிய நுழைவாயிலே அமையும், மிகுதி திறந்த நிலப்பகுதி பணிகளுக்குப் பின் UIAவிடமே திரும்பி ஒப்படைக்கப்படும், 4000 ச.அடி கொண்ட திறந்தவெளி முன்புற பகுதியில் சிறிய நுழைவாயில் அமைந்த பின் கட்டிடத்துக்கு முன் 70 அடி அகலம் இடைவெளி தாராளமாக இருக்கும், நுழைவாயிலின் வடிவமைப்பு UIA கட்டிடக் கலைஞரை கலந்து ஆலோசித்து உருவாக்கப்படும் என்று விளக்கினார். தலைமை நீதிபதி: ஆலயம் காப்போம் அமைப்பின் வழக்கில் அனைத்து காரணிகளையும் அலசி ஆராய்ந்தே நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளார்கள், பின்னோக்கி வாதம் செய்வது ஏற்புடையதல்ல, வளர்ச்சிப்பணி தொடர வேண்டும், UIA தரப்பினர் CMRL தரப்பினருடன் சுமுகமாக கலந்து பேசி நுழைவாயில் வடிவமைப்பு பற்றி முடிவு செய்து, அறிக்கையை 28.1.26 அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்திட வேண்டும் என உத்தரவிட்டார்.
வளர்ச்சிப்பணியே என்றாலும் அரசியலமைப்பு சட்டம் அளிக்கும் அடிப்படை உரிமை படி வழிபாட்டுத் தலங்களை பாதிக்கலாகாது என்ற வகையில் செல்கிறது இந்த நீதிமன்ற வழக்கு. இடையிலே எந்த இடையூறு வந்தாலும் ஆலயம் காப்போம் அமைப்பு அயராது இறுதி இலக்கை அடைய போராடிடும். ஆலயங்களை இவ்வகை பாதிப்புகளிலிருந்து காப்பாற்ற அனைவரும் முனைந்திட வேண்டும்.
தற்போதைய நிலவரம்: ஜன 26க்குப்பின் CMRL இந்த மேல்முறையீட்டில் தாங்களும் இணைந்து WP 33116இன் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென விண்ணப்பித்திருக்கிறார்கள். பிறகு இந்த வழக்கின் அடுத்த விசாரணை நடக்கவில்லை. மெட்ரோவுக்கும் கோவிலுக்கும் எதிராகிய வாதாடிய UIAவின் மூத்த வழக்கறிஞர் திரு விஜயநாராயணன் தற்போது புதிய அரசின் தலைமை வழக்கறிஞரராக நியமிக்கப்பட்டு காட்சிகள் மாறிவிட்டன! மெட்ரோவின் வாதத்தை ஆதரித்து UIAவை எதிர்க்க வேண்டிய நிலைமை!
என்ன நடக்கிறது என்று பார்ப்போம்!
தர்மம் நிச்சயம் வெல்லும்!
ஆலயம் காப்போம்! நம் கோயில்! நம் உரிமை!
#CMRL #SaveTemples ..1