நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, ஒரு குவிண்டாலுக்கு ₹72 உயர்த்தி, ₹2,441 ஆகவும், மேலும் 14 வகை பயிர்கள் மற்றும் தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்தும், விவசாயிகள் நலனை முன்னிறுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு
@narendramodi அவர்களுக்கு, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக, மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
14 வகை பயிர்கள் மற்றும் தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்திருப்பது, தமிழகத்தில் உள்ள பல ஆயிரக்கணக்கான சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களுக்குச் சிறந்த வருமானத்தையும் உறுதி செய்யும்.
தமிழகத்தில், தேர்தல் வாக்குறுதியாக, ஒரு குவின்டால் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ₹3,500 வழங்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்துள்ள தமிழக முதலமைச்சர் திரு
@TVKVijayHQ அவர்கள், தமிழக அரசு சார்பாக வழங்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்தி, ₹3,500 ஆக விவசாயிகளுக்கு விரைவில் வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம்.