எடப்பாடியார் தனது இரும்புப்பிடியில் அதிமுகவை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, கட்சியை மிகச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
அவரது உறுதியான தலைமையும், தீர்க்கமான அரசியல் பார்வையும் அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களை ஒன்றிணைத்து, அவரை இயக்கத்தின் ஒற்றைத் தலைமையாக மாற்றியுள்ளது.
சமீபகாலமாக கட்சியில் நடக்கும் மாற்றங்கள் அதிமுகவின் பலத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.
சில முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறுவது அவர்களது சுயநல அரசியலை மட்டும் தான் அடையாளம் காட்டுகிறது.
இவர்கள் தங்களின் சொந்த லாபத்திற்காகவும், அதிகாரப் பசிக்காகவும், தற்போதைய டிவிகே (TVK) அரசில் பதவிகளைப் பெற வேண்டும் என்ற பேராசையினாலும் மட்டுமே கட்சி மாறியுள்ளனர்.
தன்னலமற்ற கோடிக்கணக்கான தொண்டர்களின் பலமே அதிமுகவின் உண்மையான அடித்தளம் என்பதை தமிழ்நாடு மக்கள் உணர்ந்ததால்தான் ஒரு கோடிக்கும் அதிகமான ஓட்டுக்களை அதிமுகவிற்கு அளித்தனர்.
சுயநலவாதிகள் வெளியேறுவது கட்சியை மேலும் தூய்மைப்படுத்தியுள்ளது.
புரட்சித் தமிழர் எடப்பாடியாரின்
@EPSTamilNadu தலைமையின் கீழ், அதிமுக கட்டுக்கோப்புடன், முன்பிருந்ததை காட்டிலும் அதிக வீரியத்துடன் மக்களின் நலனுக்காக தொடர்ந்து வலுவாகப் போராடும்.