வைகை அணை தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் உள்ளது... அதை தூர்வார எதற்கு ஒன்றிய அரசின் அனுமதி??
பாஜக விசுவாசி நிர்மல் குமார் தன்னுடைய விசுவாசத்தை நிரூபிக்க தமிழ்நாட்டின் உரிமையை ஒன்றிய அரசுக்கு விட்டுக்கொடுப்பதை ஏற்க முடியாது...
வைகை அணையை தூர்வாருவதற்கு கே.கே ரமேஷ் என்பவர் 2018 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்...
2024 பிப்ரவரி மாதம் வழக்கை விசாரித்தபோது அப்போதைய தமிழ்நாடு அரசு நீர்மட்டம் 69 அடியாக உள்ளது 40 அடிக்கு கீழே குறையும்போது அணையை தூர்வார முடியுமென்று விளக்கம் கொடுப்பட்டது...
இதையடுத்து வழக்கை விசாரித்த "நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி ஆர். விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, வைகை அணையில் நீர்மட்டம் 40 அடிக்கு மேல் இருப்பதால் தூர்வாரும் பணியை மேற்கொள்ள முடியவில்லை என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை என்று குறிப்பிட்டது. நீர்மட்டம் 40 அடிக்குக் கீழே வரும்போது, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தாமதமின்றி அதற்கான நிதியை ஒதுக்கி அணையில் தூர்வாரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, மனுவைத் தள்ளுபடி செய்தனர்."
தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 26 அடி மட்டம் மட்டுமே உள்ளது... இப்போது தூர்வாரும் பணியை ஆரம்பிக்க தவெக அரசுக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை...