ஒரு காலத்தில் கலைஞர பிடிக்காதவனா (முற்போக்குவாதியா இருந்தும்) இருந்த எனக்கு, அவர் மேல எனக்கு என்ன பிரமிப்புனுனா:
திமுகவை பிடிக்காத, தான் செத்தா கொண்டாடுற மக்கள் தான் நிறைய பேர் இருக்காங்கனு தெரிஞ்சும்;
திமுக ஆட்சில எவ்ளோ உழைத்து பார்த்து பார்த்து திட்டங்கள் போட்டு, அது மக்களை சரியா போகுதானு பார்த்து பண்ணலும்;
திருப்பி திருப்பி ராமாவாரம் தோட்டத்தில, கொடநாடு பங்களால படுத்து தூங்கிட்ட இருந்த, மக்கள் மேல துளியும் அக்கறை இல்லாத இரண்டு பேருக்கு ஓட்டு போட்டு மக்கள் தன்னை தோற்கடிச்சிட்டே இருந்தும்:
மக்கள் மேல கொஞ்சம் கூட வெறுப்பு வராம, கடைசி வரை மக்கள முன்னேற்றி விடுறதுக்காக மொத்த இந்தியாவையும் கையில் வச்சிட்டு இருக்க பார்ப்பனிய அதிகார வர்க்கத்தோட சண்டை போட்டு கொண்டு இருந்தது.
NEET போன்ற நுழைவுதேர்வுகள் எளிய மக்கள முன்னேற விடாம தடுக்கும்னு காங்கிரஸ் கூட்டணில இருந்தும், தமிழ் நாட்டுக்கு வேண்டானும் தடுத்து வச்சிருந்தார்.
அதிமுக அதை உள்ளவிட்டப்ப, எல்லாரும் சில குடும்பங்கள் மட்டும் பங்கேற்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவா பீச்சுக்கு போனப்ப, திமுக மட்டும் எல்லாருக்காகவும் NEET-ஐ எதிர்த்தது. இப்பவும் "திமுக NEET-ஐ ஒழிச்சிடுச்சா"னு நக்கல் பண்ற நூலண்டிகள் பதிவுகளை like பண்ணி தன் திமுக எதிர்ப்பு வன்மத்தை தீர்த்துக்கொள்கிற மக்களுக்கு தான் திமுக அரசியல் செய்யுது.
அந்த வரிசையில் இப்ப தலைவர் ஸ்டாலின்.
அவர் வயதுக்கு மீறி உழைத்து 14 வருடங்களுக்கு பிறகு இரட்டை இலக்க வளர்ச்சி கொடுத்து, பெண்களுக்கும் மாணவர்களுக்கும் பார்த்து பார்த்து திட்டங்கள் போட்டு செயல்படுத்தியும், அதே மக்கள் பனையூர் பங்களாவில் படுத்து தூங்கிட்டு இருந்த, ஒரு சைக்கோ நடிகனுக்கு ஓட்டு போட்டு இருக்கிறார்கள்.
ஆனால் வெறுப்பின்றி, அடுத்த நாளே மக்களுக்கு நன்றி தெரிவிக்க போய்ட்டார்.
ஜெயாலாம் தனக்கு ஓட்டு போடாத மக்களை பழி வாங்குற ஆள்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தனக்கு ஓட்டு போடலனு, சமயம் பார்த்து அவங்க வேலைக்கு, ஓய்வூதியதுக்கு ஆப்பு அடிச்ச ஆள்.
ஆனா கொடூரம் என்னனா, திமுக ரொம்ப ஒழுங்கானு கேட்குற ஆளுங்க, அவங்க எதிர்பார்க்கிற அளவுக்கு திமுக strict ஆனாலும் ஓட்டு போடமாட்டாங்க. திமுக வாக்கு வங்கி, 10 க்கு கீழ போய்டும்.
அதுக்கு சிறந்த உதாரணம்: கொடுக்கிற சம்பளத்துக்கு strict ஆக வேலை வாங்குறாங்கனு மாத்தி ஓட்டு குத்தி விட்ட கும்பல்.
எல்லாருக்கும், தன் சொகுசு கெடாமல், ஷங்கர் படத்தில் வர மாதிரி ஹீரோ நடக்க நடக்க பின்னாடி அப்படியே கட்டடங்கள் பெருசாகி, சாலைகள் சுத்தமாகி வளர்ச்சி அடைய ஆசை.
So they'll keep shooting themselves in the foot.
இது GENz மால் மாற்றம்னு அவங்க கேசு எழுத தேவையில்லை .. இதான் நிதர்சனம்.. நடிகன் வந்தா போதும் .. விலைவாசி ஏறுனாலும் நாடு நாசமா போனாலும் கற்ற மனநிலை மட்டும் தான்