ஒரு முதலாளிக்கு ஒரு அல்லக்கை இருந்தானாம்.
முதலாளி என்ன செஞ்சாலும் அதை புகழ்ந்து பேசிக்கிட்டே இருப்பான்.
அவர் நடப்பதை,
காரிலிருந்து இறங்குவதை,
மேலே பார்ப்பதை,
கீழே பார்ப்பதை,
தம் அடிப்பதை,
தண்ணி அடிப்பதை என எல்லா அசைவுகளையும், அந்த முதலாளியே கூச்சப்படும் அளவுக்கு அல்டிமேட் என ஆரவாரம் செய்வது அவனது வழக்கம்.
ஒருநாள் அந்த முதலாளி கன்னத்துக்கு கையை முட்டுக் கொடுத்து, சேர் ஒன்றில் உக்காந்து சாய்ந்து தூங்கிட்டான்.
அல்லக்கை அதைப் பார்த்துவிட்டு,
பக்கத்தில் இருந்தவனிடம்,
முதலாளி சிந்திக்கிற அழகைப் பாருன்னு சொன்னானாம்.
அவன் அல்லக்கை மூஞ்சில காறி த்த்தூன்னு துப்பிட்டு போயிட்டான்.
சூர்யா சேவியர்
16-06-26