சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கடலூர் மாவட்டம் பூஆதவம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகுல் காந்தி(23) கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பெட்டி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். குடும்பத் தகராறு காரணமாக வீட்டில் இருந்த இருமல் மருந்தை தண்ணீரில் கலந்து குடித்துள்ளார். இதில் மயங்கி கிடந்த ராகுல் காந்தியை பெற்றோர் செட்டியார் தோப்பு பகுதியில் உள்ள அன்பு என்ற மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இளைஞரை பரிசோதனை செய்த போலி மருத்துவர் ஆனந்தபாபு நோயாளியை வேறு எந்த மருத்துவமனைக்கும் கொண்டு செல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டு சிகிச்சைக்கு 50,000 ரூபாய் செலவாகும் என்று கூறிவிட்டு 15,000 ரூபாய் முன்பணமாக பெற்றுள்ளார்.
எப்படி அரசியல் தெரியாத, ஆட்சி தெரியாத, முதலமைச்சர் பதவி என்றால் என்னவென்றே தெரியாத போலி அரசியல்வாதி நடிகர் விஜயிடம் தமிழ்நாடு சிக்கிக்கொண்டதோ அதேபோல் போலி மருத்துவரிடம் ராகுல் காந்தி சிக்கிக்கொண்டார். என்ன சிகிச்சை கொடுப்பது என்று தெரியாமல் தவறான சிகிச்சை கொடுத்ததால் ராகுல் காந்தியின் உயிர் இரவு 2 மணி அளவில் பிரிந்தது. கூடிய விரைவில் தமிழ்நாட்டின் நிலைமையும் இப்படியாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
தவறான சிகிச்சையால் உயிர் பிரிந்ததை புரிந்து கொண்ட ராகுல் காந்தியின் குடும்பத்தினர் போராட்டத்தில் இறங்கினர். சம்பவத்தை கேள்விப்பட்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை தொடங்கின. அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் மின் நகரைச் சேர்ந்த ஆனந்தபாபு (45) TVK கட்சி நிர்வாகி என்பதும் அவர் மருத்துவரே இல்லை என்பதும் தெரிய வந்தது.
மேலும் விசாரணையில் மருத்துவம் சார்ந்த டிப்ளமோ படிப்பு படித்து விட்டு TVK கட்சி தொடங்கியது முதல் தானொரு மருத்துவர் என்று கூறிக்கொண்டு ஸ்டெதஸ்கோப் மாட்டிக்கொண்டு வளம் வந்ததும் போலி மருத்துவராக இருந்து கொண்டு அந்த ஊர் மக்களுக்கு தவறான சிகிச்சை மேற்கொண்டதும் தெரிய வந்தது. தற்பொழுது மருத்துவமனை மற்றும் ஆனந்தபாவுக்கு சொந்தமான மெடிக்கல் ஷாப் இரண்டுக்கும் சுகாதாரத்துறை சீல் வைத்துள்ளது. ஆனந்தபாபு தவெக கட்சி நிர்வாகி என்பதால் கைது மட்டும் செய்துள்ளது இன்னும் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்படவில்லை.