இந்தியா இதுவரைக்கும் டிரா பண்ண நூறு டெஸ்ட்மேட்ச்ல 60ல தோல்விய தவிர்க்கவே போராடிருக்கும்.விக்கெட் விடாம மூனு நாள் சோறு தண்ணி இல்லாம டொக்கு வைச்சு டீமை தோல்வில இருந்து காப்பாத்துன ராகுல்டிராவிட்டை வரலாறு மறந்துருச்சு.அதுக்கு காரணம் 9விக்கெட் கைல வைச்சுட்டு 250ரன்னை சேஸ் பண்ண கொஞ்சம் கூட முயற்சி பண்ணாம தோல்விய தவிர்க்குறேன்னு கட்டைய போட்டு மேட்ச்சோட ரிதமையே ஸ்பாயில் பண்ணது தான்.டார்கெட் பத்தி கவலைபடாம டீமோட தற்போதைய சூழ்நிலைய கருத்துல கொள்ளாம கிரீஸ்குள்ள நிக்குற வரைக்கும் சுத்திட்டே இருப்பேன்னு 45பால்க்கு 65 அடிச்சுட்டு பெவிலியன்ல போய் உக்காந்திருந்த சேவாக்கை தான் இந்த உலகம் பெரிய பேட்ஸ்மேன் ஆபத்தான பேட்ஸ்மேன்னு புகழாரம் செலுத்துது.தோல்வி என்னைக்குமே எந்த சூழ்நிலையிலும் ஆராதிக்க கூடியது இல்லை,வெற்றிக்காக போராடுறப்ப எதிர்பாராம கிடைக்குறது தான் தோல்வியா இருக்கனும்.
ஆனா இங்க,கூப்பிலே இன்பம்,கூப்பினாலே குஜிலிமஸ்து தான்,எதிர் கட்சியா தான் இன்னும் வீரியமா செயல்படுவோம்னு அதிகாரம் கைல இருந்தப்பவே தோல்வியை ரொமான்டிசைஸ் பண்ணி பேசிட்டே இருந்தாங்க.அவனுக்கு ஜெயிக்குறதுக்கு ஒருசதவீத வாய்ப்பு கூட இல்லாம இருந்தது,ஆனா அவன் தோல்விய பத்தி பேசவே இல்லை.நமக்கு ஜெயிக்குறதுக்கு நூறுசதவீத வாய்ப்பு இருந்தது,ஆனா எல்லாரும் தோல்விய கொண்டாடிட்டு இருந்தாங்க.அந்த எண்ணமே தன்னோட ஓட்டை தான்டி வீட்ல இருக்கவங்கட்ட கூட பேசி கன்வின்ஸ் பண்ற அளவுக்கு இறங்கி போகாத நீ போட்டு எனக்கென்ன நிறையங்குற ஈகோவை உண்டு பண்ணிருச்சு.
திமுகவோட கடந்தகால தோல்விகளை கடந்து வந்தவர்களுக்கு வேணும்னா இது சாதாரணமா தெரியலாம்,ஆனா முதல்முறை வெற்றிக்காக வாக்களிக்க நினைக்குற இளைஞன் மனசுல நிச்சயமா ஜெயிச்சிருவோம்ங்குற நம்பிக்கைய ஆழமா பதிய வைக்கனும்,அவன்கிட்ட போய் திமுக பாக்காத தோல்வியானு பழம்பெருமை பேசுனா நம்ம கூட டிராவல் பண்ண அவன் தயாரா இருக்க மாட்டான்.6000ருபாய்க்கு crocs செருப்பு வாங்கி போட்டு சுத்துறவன்ட போய் உங்க தாத்தா செருப்பு போட முடியாம இருந்தாருடானு சொன்னா ஏன் புரோ out of stock ல போயிருச்சானு தான் கேட்பான்.
கொற்றக்குடையா கொள்கையானு கேட்டால் கொள்கை தான்னு சொல்றது கலைஞர் ஐயா காலத்துக்கு வேணும்னா சரியா இருந்திருக்கும்.சுற்றிலும் நாட்டை அடிச்சு திண்ண ஓநாய்கள் ஓலமிடுறப்ப கொற்றக்குடைய விட்டுட்டு கொள்கைய எப்புடி காப்பாத்த முடியும்.மக்களையேல்லாம் பலிகுடுத்துட்டு கொள்கைய காப்பாற்றி யாருக்கு என்ன பயன் ? ஒரு பேரரசை விரிவுபடுத்த ஆசைபடுற அரசன் மொதல்ல தன் கைவசம் இருக்க ராஜ்யத்தை பலப்படுத்தி கட்டுப்பாட்டுல வைச்சுக்கனும். ஆனா நீங்க அஞ்சு வருசமும் ஓட்டு போடாதவங்க மேல காட்டுன அக்கறையும் அன்பையும் உங்களுக்காக உழைச்ச கட்சிக்காரங்க மேல காட்டவே இல்லை.சிவாஜி கிருஷ்ணமூர்த்திய தூக்கி உள்ள வைச்சது எடப்பாடியோ மோடியோ இல்லை,நீங்க தான்.யாருக்கு குஜிலிமஸ்து பண்ணிவிட அவரை தூக்கி உள்ள வைச்சீங்களோ அவங்க உங்களுக்கு ஓட்டு போட்ருக்க மாட்டாங்க,ஆனா சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கழகத்துக்கு தான் போட்ருப்பாரு.திமுகவ பத்தி பொழுது விடிஞ்சதும் பல்லுகூட விளக்காம அவதூறு பரப்புறவனுகளோட அன்னைக்கு முழுக்க வேலை பொலப்புலாம் விட்டுட்டு சண்டை போட்டு இருப்போம்,ஆனா நீங்க சாயந்திரம் அவன் வீட்டுல பெரியம்மாவுக்கு சீமந்தம்னு பொக்கேவோட போய் வாழ்த்திட்டு வருவீங்க.எல்லாரும் தெருநாய்கடிக்கு எதிரா பேசிட்டு இருக்கப்ப உதயநிதி நாய் போட்டோ போட்டு வெருப்பேத்துவான்.ஒருகட்டத்துல தொண்டனோட ஆதங்கத்தையும் மன ஓட்டத்தையும் உணர முடியாதபடி ஒரு இரும்புதிரை உங்களுக்கும் எங்களுக்கும் இடைல விழுந்துருச்சு.விஜய் என் புருசன்னு சொல்லிக்குறதுல சங்கீதாவுக்கு எந்த பெருமையும் இல்லைங்குற மாதிரி தான் இந்த அஞ்சுவருசமும் ஆளும் கட்சிக்காரன்னு சொல்லிக்குறல எந்த பெருமையும் பயனும் இல்லாம கட்சிக்காரங்க இருந்தாங்க.
நீங்க சிறந்த மக்கள் தலைவர்,அதுல மாற்றுகருத்தே இல்லை.ஆனா நல்ல அரசியல்வாதியானா நூறு சதவீதம் கிடையாது.தேர்தல் அரசியல்ல எடப்பாடிக்கு இருக்க விழிப்புணர்வு உங்களுக்கு 10%கூட கிடையாது. 2019ல 39 mp தொகுதிய தோத்தாலும் ஆட்சியை தக்க வைச்சுக்க தேவையான 10mla ஜெயிச்சாரு.ஆட்சிக்கு எதிரா மிகப்பெரிய அலை இருந்தாலும் தன்னோட பலம் இருக்க தொகுதிகளை மட்டுமாவது தக்க வைச்சு 65சீட் ஜெயிச்சாரு.தன்னோட சொந்த தொகுதி,ஓட்டு போடுறவன்லாம் தன்னோட சொந்தக்காரன்,சாதிக்காரன்ங்குற அலட்சியம் இல்லாம தவெக வேட்பாளரை விலைக்கு வாங்கி அவனை வாபஸ் வாங்க வைச்சாரு. இந்த மாதிரி எந்த பேக்கப் பிளானும் இல்லாம மக்களுக்கு நல்லது பண்ணுனேன் எனக்கு ஓட்டு போடுவாங்கனு வாளும் இல்லாம கேடயமும் இல்லாம நிராயுதபாணியா போய் நின்னு மார்புல ஈட்டிய வாங்கிட்டு நிக்குறீங்க 1/2
தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன?
இனி நாம என்ன பண்ணணும்?
உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன்.
🔗:
udanpirapinkural.in/