ரீல்ஸ் ஆட்சி நடத்தும் கட்சி கட்டும் கதைகள்...
"Confident Force" என்கிறார்கள்!
இரண்டு தொகுதிகளில் தேர்தலை சந்தித்தபோது இருந்த confidence-ஆ?
"Corruption-Free Force" என்கிறார்கள்!
புலி வரி ஏய்ப்பு வழக்கு நினைவில் இருக்கிறதா? அந்த வழக்கு எப்படித் தொடங்கியது, எப்படிப் போனது என்பதும் மக்களுக்கு தெரியும்.
கடந்த ஒரு மாதத்தில் உங்கள் நிர்வாகிகள் மீது வந்த பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகளின் பட்டியலை ஒரு முறை பார்த்துவிட்டு வாருங்கள். இந்த நிலையில் பெண்கள் பாதுகாப்பைப் பற்றி நீங்கள் பேசுவது வேடிக்கையாக இல்லையா?
குழந்தைகளை அடம் பிடிக்கச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று பொறுப்பைப் பற்றிப் பேசுவது கேட்கவே வேடிக்கையாக இருக்கிறது.
"நிதி ஆயோக் கூட்ட உரையை நாடே பாராட்டுகிறது"
அது சரியில்லை, இது சரியில்லை என்று பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த ஸ்டிக்கர் அரசு, இறுதியில் தி.மு.க. சாதனைகளையே விளம்பரம் செய்யும் நிலைக்கு வந்திருப்பது தான் வேடிக்கையின் உச்சம்.
"எந்நாளும் எதற்கும் அடிபணியாதவர்" என்று படிக்கும்போது ஒரு காட்சி ஞாபகத்திற்கு வருகிறது...
சிவப்பு டி-ஷர்ட் அணிந்த ஒருவர், கைகட்டி நின்று ஒரு வீடியோ வெளியிட்டார்...
யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா?
சரி, அதெல்லாம் இருக்கட்டும்...
இவ்வளவு அறிக்கைகளுக்குப் பதிலாக, மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற பொறுப்போடு ஒரு பிரஸ் மீட் எப்போது வைக்கப் போகிறீர்கள்?
தீய சக்தி தி.மு.க. கார்ப்பரேட் கம்பெனியின் தலைவர் மிஸ்டர் ஸ்டாலின் சார்… மாண்புமிகு முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் சார், பொறாமையில் புகைச்சலில் அழுது வடிந்திருக்கிறார். கத்திக் கதறி இருக்கிறார்.
எங்கள் தலைவர், தமிழ்நாட்டின் Confident force; Corruption-free force. இப்போது மட்டுமன்று. எப்போதும் எங்கள் தலைவர்தான் தமிழக மக்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பார். இதை 2026 தேர்தல் முடிவின் வாயிலாகக்கூடத் தெரிந்துகொள்ளாமல் பேசுகிறார்.
பெண்கள் பாதுகாப்பில் முனைப்புடன் இருப்பதால்தான் instant action-இல் இறங்கி நடவடிக்கை எடுக்கிறது, நமது வெற்றித் தலைவரின் அரசு. ஸ்டாலின் சார் போல, அரசியலை மறந்து, இன்ஸ்டா ரீல்சுக்குள் மூழ்கச் சொல்லி, மூச்சு திணறவில்லை.
எந்நாளும் எதற்கும் அடிபணியாத நம் தலைவரின் நிதி ஆயோக் கூட்ட உரையை நாடே பாராட்டுகிறது. விசாரணையை நேரில் எதிர்கொண்டவர், நம் தலைவர். டாஸ்மாக் ரெய்டுக்காக நடுங்கிப்போய் டெல்லி சென்ற ஸ்டாலின் சார், இதைப் பேசவே கூடாது.
வாய்ப்பு கிடைக்கும் துறையில் எல்லாம் Party Fund என மக்கள் பணத்தை ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக மக்களே சுக்குநூறாகக் கிழித்து எறிந்துவிட்டனர்.
எங்கள் தலைவரின் பேச்சு பாணியைக்கூட copy-paste செய்வது தி.மு.க. கூடாரம்தானே தவிர, எங்கள் தலைவருக்கு அவர்களை copy அடிக்க வேண்டிய அவசியமே இல்லை.
தமிழ்நாட்டையே ஷாப்பிங் செய்து சுருட்டிய தன் குடும்பம் போல, நம்மையும் நினைத்துவிட்டார் போல. ஊழலற்ற நிர்வாகம், லஞ்ச லாவண்யம் அற்ற நிர்வாகம் என்று தில்லாக அறிவித்த நம் தலைவரைப் போல அறிவிக்கத் திராணி இல்லாத மிஸ்டர் ஸ்டாலின் சார், ஏதேதோ பேசி ஒப்பேற்றி இருக்கிறார்.
நம் தலைவரின் ஒரே ஓர் ஊழல் குற்றச்சாட்டுக்குக்கூட வாய் திறக்க முடியாத ஸ்டாலின் சார், இப்போது வாய்க்கு வந்தபடி வன்மத்தில் வடை சுடுகிறார்.
பா.ஜ.க.வின் மறைமுக அடிமையாக இருந்து, நேர்முக அடிமையாக மாறத் துடிப்பவர்கள் எல்லாம், நம்மைப் பார்த்துப் பேசலாமா? மக்களிடமே இந்தக் கேள்வியை விட்டுவிடுகிறோம்.