பொய்யான,சமூக பதற்றத்தை ஏற்படுத்தும்
Twitter பதிவுகளை நீக்கச்சொல்லி
தமிழ்நாடு காவல்துறை சார்பில் கடிதம் எழுதினால்
@XCorpIndia சம்மந்தப்பட்ட
நபர்களுக்கு காவல்துறை எழுதிய கடிதத்தை அப்படியே ஈமெயில் மூலமாக அனுப்பி வைத்துவிடும்..
சம்மந்தப்பட்டவர்கள் கருத்துரிமையின் அடிப்படையில் தாங்கள் எழுதிய பதிவு குறித்து சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தை அணுக வாய்ப்பு கிடைத்துவிடும்
ஆனால், Facebook,Instagram பதிவுகள் தொடர்பாக META நிறுவனத்திற்கு
போலீஸ் தரப்பில் அனுப்பப்படும் கடிதத்தை
தன்னுடைய பயனாளர்களுக்கு மெட்டா தருவதில்லை
இதனால்,சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தைஅணுக இயலாது.
வாய்ப்பும் இல்லை
அதனால்,தமிழ்நாடு காவல்துறையின்
@tncybercrimeoff தற்போது இந்தியாவிலேயே எந்த அரசும் செய்யாத
வேலையை செய்து வருகிறது
மதமோதலையோ,சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் ரீல்ஸ் குறித்தல்ல…
அரசை விமர்சித்து ஆதாரங்களுடன் பதிவிடக்கூடிய ரீல்ஸ் வீடியோக்களை நீக்க முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார்கள்
Meta-வுடன் இணைந்துள்ளதால்
Facebook,Instagram இரண்டிலும் ரீல்ஸ் வீடியோக்கள் ஒளிபர்ப்பாவதால்,
IT சட்டத்தின் கீழ் புகார் கொடுத்து
சம்மந்தப்பட்ட ரீல்ஸ்/பதிவுகளை இந்தியாவில் தெரியாதவண்ணமும்,
சில Facebook கணக்குகளையும் சைபர் க்ரைம் பிரிவு சட்டப்பூர்வமாக புகார் கொடுத்து முடக்கி வருகிறது
கடந்த காலத்தில் இணையதளத்தில் அதிமுக,திமுக ஆட்சியை எவ்வளவோ கடுமையாக விமர்சித்த சவுக்கு,மாரிதாஸ்,
சாட்டை போன்ற யாருடைய சமூகவலைதள கணக்குகளையோ,YouTube பக்கத்தையோ
தமிழ்நாடு அரசோ,சைபர் க்ரைம் போலீஸாரோ முடக்கவில்லை
ஆனால்,
தமிழ்நாட்டில் இதுவரை எந்த அரசும் செய்யாத இணையதள அடக்குமுறையை
@tnpoliceoffl ,
@tncybercrimeoff
தற்போது செய்து வருகிறது
பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இதுவரை
நடக்காத அராஜகத்தை துணிகரமாக 32 நாட்களில் தவெக அரசு செய்து வருகிறது
இந்த விவகாரம் ஒருவேளை நீதிமன்றத்திற்கு சென்றால்
மிக மோசமான அவமானத்தை
தமிழ்நாடு காவல்துறை நிச்சயம் சந்திக்கும்