உங்களுக்கு ஒண்ணுன்னா நான் முன்னாடி வந்து நிப்பேன்" அப்படின்னு மேடைக்கு மேடை வாய் கிழியப் பேசிட்டு, இன்னைக்கு தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிற கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவத்துல கண் மூடி, வாய் பொத்தி சொகுசு சோபாவில் உட்கார்ந்து குறட்டை விட்டு கொண்டிருக்கும் 'டம்மி' சி.எம் விஜய் அவர்களே, உங்களுக்குக் கொஞ்சமாவது வெட்கமா இருக்கா இல்லையா? மேடையில் மட்டும் அம்புட்டு வீர வசனம் பேசிட்டு, இன்னைக்கு உங்க ஆட்சியில், உங்க கட்சியினர் நடத்தும் பாலியல் கொடூரர்களை வெட்கமில்லாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறீர்களே, இதுதான் நீங்க கொடுக்கிற லட்சணமான ஆட்சியா?
தேர்தல் நேரத்துல உங்க வெற்றிக்கு ஓடோடி வந்து பாடுபட்ட ஒரு பெண்ணுக்கு இப்படி ஒரு கொடூரம் நடந்திருக்கு. அந்தப் பெண் கதறித் துடிச்சு நீதி கேட்கும்போது, நியாயம் வாங்கித் தர வேண்டிய நீங்களே உங்க பதவியைக் காப்பாத்திக்கணும்ங்கிறதுக்காக ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ-வை வச்சு அந்தப் பெண்ணை மிரட்டுறீங்களா? இதையெல்லாம் செஞ்சுகிட்டு, இன்னும் பெண் பாதுகாப்பு பற்றி பேச உங்க வாய் கூசலையா.?
நாட்டில் என்ன நடந்தா நமக்கென்ன, நமக்குத் தேவை பதவியும் நாற்காலியும் மட்டும்தான்னு கேவலமான அரசியலை நடத்திக்கிட்டு, உங்க ஆட்சியில் நடக்கும் பாலியல் குற்றங்களைத் தங்களுக்குச் சாதகமாக மூடிமறைக்க நினைக்கும் உங்களின் இந்தத் துரோகப் போக்கை தமிழ்நாட்டு பெண்கள் கவனிச்சுட்டு தான் இருக்காங்க.
அரசியல் அதிகாரத்தை வச்சுப் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டுற அந்த எம்.எல்.ஏ மீது எப்போது நடவடிக்கை எடுப்பீர்கள்.? இல்லை என்றால், பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கத் துப்பில்லை என்று பொதுவெளியில் ஒப்புக்கொண்டுவிட்டு, பேசாமல் பட்டினப்பாக்கத்திற்கு ஓடி ஒளியுங்கள் விஜய்.
#யார்_அந்த_மேலிடம்